முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 6, 2015

துபாய் Procter & Gamble நிறுவனத்தில் Customer Team Assistant வேலை வாய்ப்பு!!

No comments :
Customer Team Assistant (Duracell)
Procter & Gamble - Dubai


The customer team assistant is in charge of executing a number of Marketing plans and promotions negotiated by the Account Executive. He/she works in support of the customer team on the commercial accounts.

Act as key contact for customers and sales force for all customer-specific events (animations, ILP/PLV, transverse events)

  • Ensures the “Sales Fundamentals” dashboards are kept up to date
  • Manage the Price list
  • Manage the Fact Sheets
  • Manage the promotionnal offers
  • Coordination of transverse events in collaboration with Marketing team and external agencies
  • Executional support to deliver marketing operations (targeted mailings, couponing, etc.)
  • Budget management (team expenses management)
  • Reporting of the customers’ NOS
Required competencies

Ability to operate within a multifunctional team

Ability to work with precision and autonomy

Discipline and efficiency

Collaborative approach

NOTE: Due to P&G’s announcement of its intention to divest the Duracell business to Berkshire Hathaway, this role is specific to the Duracell business. Successful candidates will be part of the Duracell team. Upon the anticipated closing, it is expected that successful candidates will be employed by the Duracell business, together with other employees supporting Duracell

Job

Administrative

Primary Location

AE-Dubai-Dubai

Schedule

Full-time

TO APPLY: CLICK HERE

மண்டபம் மீனவர் காலனியில் நியாயவிலைக்கடை துணை சேவை மையம் திறப்பு!!

No comments :
மண்டபம் மீனவர் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சம் செலவில் நியாயவிலைக்கடை துணை சேவை மையம் பேரா.Dr.M.H.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்கள் ! !

மண்டபம் மீனவர் காலனியில் ரூ.6 லட்சம் செலவில் ரேஷன்கடை துணை சேவை மையத்தை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகரை அடுத்துள்ள மீனவர் காலனியில் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரேஷன்கடை துணை சேவை மையம் கட்டப்பட்டு உள்ளது.
இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர் தலைமை தாங்கினார். அதிமுக தலைமை கழக பேச்சாளர் மண்டபம் பேரூராட்சியின் 5வது வார்டு கவுன்சிலர் சகோ.ம.மைதீன் வரவேற்புரையாற்றினார்,

விழாவில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடத்தை பேராசிரியர்.M.H.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் திறந்து வைத்து பேசியதாவது:–
மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட மீனவர் காலனியில் வசிக்கும் மக்கள் என்னை சந்தித்து ரேஷன்கடைக்கு தனி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இதன்மூலம் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் சிரமம் இல்லாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லும் வகையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
மண்டபம் பகுதியில் வசிக்கும் மீனவர்களின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ஏற்கனவே 5–வது வார்டில் ரூ.5 லட்சம் செலவில் நவீன கழிப்பறை கட்டிடம், ஜெ.ஜெ.நகர் பகுதியில் ரூ.6லட்சம் செலவில் தார்ச்சாலை, ரூ.6 லட்சத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் என பல்வேறு பணிகள் எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர வடக்கு கடற்கரை பகுதியை ஆழப்படுத்தவும் சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக தமிழக அரசும் தெரிவித்துள்ளது.

மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். உங்கள் கோரிக்கையை என்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்று தனது உரையில் குறிப்பிட்டார்கள். கூட்ட முடிவில் பொதுமக்கள் சந்திப்பும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மண்டபம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள்
மனிதநேய மக்கள்கட்சியின் மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர்அலி, மூத்த நிர்வாகி சகோ.பாக்கர் அலி, மண்டபம் மகமூது, சட்டமன்ற உறுப்பினரின் நேரடி செயலாளர் சகோ.தாஹிர் சைபுதீன்,
ஆற்றங்கரை கிளை செயலாளர் சகோ.நூருல் அஃப்பான் மற்றும் மீனவர் காலனி பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்


கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் விற்பனை கண்காட்சி!!

No comments :
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப்பொருட்கள் விற்பனைக் கண்காட்சி நடந்தது.


கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் யூசுப் சாகிப் துவக்கி வைத்தார். மகளிர் திட்ட இணை இயக்குநர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். அலங்கார நகைகள், சிறுதானிய உணவுப்பொருட்கள், மூலிகை மருந்துகள், பனை ஓலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தேனீ வளர்ப்பு குறித்த இலவச ஆலோசனை வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை சமூக மேம்பாட்டு பணித்திட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செய்ய கூடுதல் இடம் வழங்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம்!!

No comments :

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செய்ய விரும்பி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு கூடுதல் இடம் வழங்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவதுதமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு (2015) ஹஜ் பயணம் மேற்கொள்ள 15,032 பேர் ஹஜ் கமிட்டியிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 2,585 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.



ஹஜ் 2015 வழிகாட்டு விதிமுறைகளின்படி முன்பதிவு அடிப்படையில் 1699 ஹஜ் பயணிகள் தேர்வானார்கள். பொதுப்பிரிவில் 886 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். மற்றவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்தவர்களில் 12 ஆயிரம் பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளில் மத்திய அரசு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்தது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் ஹஜ் பயணம் செல்ல முடிந்தது. 2013-ம் ஆண்டு 3,696 பேரும், 2014-ம் ஆண்டு 2,858 பேரும் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்ல கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்தை மத்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

செய்தி: இன் இண்டியா