முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 20, 2015

கீழக்கரையில் அதிமுக 44வது ஆண்டு துவக்க விழா!!

No comments :
அதிமுக 44வது ஆண்டு துவக்க விழா கீழக்கரையில்  சிறப்பாக நடைபெற்றது.


தலைமைக்கழக பேச்சாளர், திருமதி. மெஹர் தாஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் அதிமுகவின் நலத்திட்டங்கள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.





விழாவில், நகர்மன்ற தலைவி திருமதி. ராபியத்துல் காதிரிய்யா, திரு. ரிஸ்வான், நகர் செயலாளர் திரு.இராஜேந்திரன், கிளைச்செயலாளர் திரு.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை அதிமுக இளைஞரணி செயலாளர் திரு. இம்பாலா சுல்தான் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் குருபூஜை விழாவிற்கு வருவோருக்கான வழித்தடங்கள் அறிவிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இம்மாதம் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் குருபூஜை விழாவிற்கு வெளிமாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வருவோருக்கான வழித்தடங்களை ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய மண்டல வாகனங்கள்:  திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வருவோர் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். 

இம்மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக ராமநாதபுரம் நோக்கி வரக்கூடாது.
வடக்கு மண்டல வாகனங்கள்:சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக வந்து அதே வழியாகச் செல்ல வேண்டும்.


மேற்கு மண்டல வாகனங்கள்:  கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக வந்து அதே வழியாகவே திரும்பிச் செல்ல வேண்டும்.
மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாகப் பசும்பொன் வந்து, அதே வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து வந்த வழியாகவே திரும்பிச் செல்ல வேண்டும். அல்லது தூத்துக்குடி, சூரங்குடி, சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாகப் பசும்பொன் வந்து அதே வழியாகவே திரும்பிச்செல்ல வேண்டும். விருதுநகர் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாகப் பசும்பொன் வந்து அந்த வழியாகவே திரும்பிச் செல்ல வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரையில் இருவருக்கு கத்தி குத்து, ஆட்டோ டிரைவர் கைது!!

No comments :
கீழக்கரை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் முத்துக் குமார், 22, முனியசாமி, 30. இருவரும் இருசக்கர வாகனத்தில் கீழக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த ஆட்டோவில் மோதினர். இதனால் ஆட்டோ டிரைவர் கீழக்கரையை சேர்ந்த வெற்றிவேலுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அவர்கள் கலைந்து சென்றனர். 

நேற்று காலை கீழக்கரை பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த முத்துக்குமார், முனியசாமியை வெற்றி வேல் கத்தியால் குத்தினார். காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். 

கீழக்கரை இன்ஸ்பெக்டர் ஆட்டோ டிரைவரை கைது செய்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)