முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 28, 2016

ராமநாதபுரத்தில் நேற்று காலை பலத்த மழை!!

No comments :
ராமநாதபுரத்தில் நேற்று காலை திடீரென்று பலத்த மழை பெய்து மக்களை குளிர்வித்தது. ராமநாதபுரம் நகரில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இத்துடன் கடந்த சிலநாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் பரிதவித்து வந்தனர். 


இந்நிலையில் நேற்று காலை திடீரென்று பலத்த மழை பெய்தது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், வேதாளை, குயவன்குடிஉள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 
ராமநாதபுரம் நகரில் அரை மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி தென்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ந்தனர். 



செய்தி: திரு. தாஹிர், கீழை.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் சர்வதேசத்தர ஆக்கி மைதானத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!!

No comments :
ராமநாதபுரத்தில் சர்வதேசத்தர ஆக்கி மைதானத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.


ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரூ.கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும்உட்கட்டமைப்பு இடை நிரப்பு நிதியில் இருந்து ரூ.கோடியே 57 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலும்திட்ட சேமிப்பு மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.51 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலும் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளி ஆக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்திற்கு தன்னிறைவு திட்டத்தில் வேலுமாணிக்கம் நிறுவனங்களின் சார்பில் ரூ.50 லட்சமும்செய்யதம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.35 லட்சமும்மாவட்ட ஆக்கி சங்கத்தின் சார்பில் ரூ.28 லட்சத்து 50 ஆயிரமும்டாக்டர் கனகமணி அரவிந்தராஜ் ரூ.10 லட்சமும்சென்னை கால்பந்து கழகம் ரூ.லட்சமும் பங்களிப்பாக வழங்கி உள்ளனர். 




இந்த ஆக்கி விளையாட்டு மைதானத்தை நேற்று காலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முனைவர் நடராஜன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அலிஅக்பர், அன்வர்ராஜா எம்.பி, மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், ராம்கோ தலைவர் முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, நகர் செயலாளர் அங்குச்சாமி, நகரசபை தலைவர் சந்தானலெட்சுமி, வேலுமாணிக்கம் நிறுவனங்களின் தலைவர் மனோகரன், ஆக்கி சங்க மாநில செயலாளர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மருதுபாண்டியன், அ.தி.மு.க. தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், மாவட்ட திட்ட இயக்குனர் பழனி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுலா மாளிகை 

முன்னதாக, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.11 கோடி மதிப்பில் சுமார் 7 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடத்தையும், ராமேசுவரத்தில் ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சுற்றுலா மாளிகையையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!!

No comments :
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

அதன்படி, 2015-16ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான        ww‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப உறை மீது சம்பந்தப்பட்ட விருதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, உறுப்பினர், செயலர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
116-, ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை
நேரு பூங்கா
சென்னை-600084 

என்ற முகவரிக்கு வரும் 10.4.2016-க்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கவேண்டும்.


மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எஸ்.டி.ஏ.டி. சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், ராமநாதபுரம், தொலைபேசி-0456-7230238, செல்லிடப்பேசி 74017-03452 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)