முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 10, 2016

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு – கலெக்டர்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட உள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

தமிழக அரசு கோழிப்பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கோழி அபிவிருத்தி திட்டத்தினைரூ.25.00 கோடி செலவில் 2016,-2017ம் ஆண்டிற்கு செயல்படுத்த ஆணை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 140 அலகு நாட்டு கோழிப்பண்ணைகள் அமைக்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவேர், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர், தேர்வு செய்யப்பட தகுதியானவர்கள். கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் விண்ணப்பத்தாரர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும்.கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 

பயனாளிகள் தங்கள் சொந்த முதலீட்டில் அல்லது வங்கி மூலம் கடன் பெற்று இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை அமைக்கலாம். நாட்டுகோழிப்பண்ணை அமைப்பதற்கான கோழிக்கொட்டகை கட்டும் பணி, உபகரணங்கள், கோழித்தீவனம், கோழிக்குஞ்சுகள் வாங்குதல், அசோலா உற்பத்தி போன்றவை அமைக்க ஆகும் மொத்த செலவில், 25 சதவீதம் முன் மானியம் தமிழக அரசு வழங்குகிறது.

இதைத்தவிர, கோழி வளர்ப்பதற்கான தீவன செலவினை குறைப்பதற்கு 10 பயனாளிகள் கொண்ட சுய உதவிக்குழு ஒன்றுக்கு தலா ஒரு தீவன அரவை இயந்திரம் தமிழக அரசு வழங்கவுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவர் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 3 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

மேற்கூறிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் விண்ணப்பங்களை
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
ராமநாதபுரம் உதவி இயக்குநர்,
கால்நடை பராமாரிப்புத்துறை,
ராமநாதபுரம், பரமக்குடி ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் ஒன்றரை மாதத்துக்கு 144 தடை!!

No comments :
ராமநாதபுர மாவட்டத்தில், இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஒன்றரை மாதத்துக்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினமும், அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியும் நடைபெறுகிறது.


இதையொட்டி பொது அமைதியை காக்கும் வகையில் 144 நடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில்,

இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் அக். 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

செப்டம்பர் 9 முதல் 15ம் தேதி வரையும், அக்டோபர் 25 முதல் 31ம் தேதி வரை வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)