முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 25, 2016

அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல்!!

No comments :
தமிழக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 21-ந் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான பதவி காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில்,
12 மாநகராட்சிகள்,
124 நகராட்சிகள்,
31 மாவட்ட பஞ்சாயத்துகள்,
385 பஞ்சாயத்து யூனியன்கள்,
528 பேரூராட்சிகள்,
12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன



அனைத்து மாநகராட்சிகளிலும் 919 வார்டுகள், நகராட்சிகளில் 3,613 வார்டுகள், பேரூராட்சிகளில் 8,288 வார்டுகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டுகள், பஞ்சாயத்து யூனியன்களில் 6,471 வார்டுகள், கிராம பஞ்சாயத்து வார்டுகள் 99,324 என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன. இந்த முறை வார்டு கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மட்டும் நேரடித் தேர்தல் நடக்கிறது. மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் ஏற்கனவே நிறைவேறியது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கான 50% இடஒதுக்கீடு இடங்கள் எவை எவை என்ற பட்டியல் அரசாணையாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை உள்ளாட்சி தேர்தல்களுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.3-ந் தேதியாகும். 2 கட்டமாக பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மொத்தம் 91,098 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். முதல் கட்டமாக அக்டோபர் 17-ந் தேதியன்று 10 மாநகராட்சிகளுக்கும் திண்டுக்கல், சென்னை மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 19-ந் தேதியன்று தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளன. இத்தேர்தலில் மொத்தம் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

துபாய் சுகாதாரத்துறையில் ADMIN ASSISTANT பணி வாய்ப்பு!!

No comments :
துபாய் சுகாதாரத்துறையில் ADMIN ASSISTANT பணி வாய்ப்பு!!

Title
ADMIN ASSISTANT

Category
Administration 



Description
DHA - Medical Fitness Services Department is currently looking for candidates to fill the post of Admin Assistant.


Minimum requirements below:
- Graduated High School/Secondary Education with at least 1 year expeirence doing the same
- Graduated Diploma/Bachelors Degree in any course, no experience necessary 

விண்ணப்பிக்க இங்கு க்ளிக் செய்யவும்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் செப்.28ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் செப்.28ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர்(பொறுப்பு)எம்.ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் செப். 28ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. 


இக்கூட்டத்தில் மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம். செப். 22ஆம் தேதி ராமநாதபுரம் மின்பகிர்மான வட்டத்தில் 27 உதவி மின் பொறியாளர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் இடம் பெற்றுள்ள மின்திருட்டு தடுப்புக் குழுவினரும் இணைந்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் கூட்டாக மின் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் சில மின்திருட்டுகளும் கண்டறியப்பட்டது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நபர்களிடமிருந்து சமரசத் தொகையாக ரூ.2 ஆயிரமும், இழப்பீட்டுத் தொகை ரூ.3,648ம் வசூல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 25-செப்டம்பர் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 1.1.2017 ஆம் தேதி வரை 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ள ஏதுவாகவும், பெயர் திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல், இடம் மாறுதல் போன்றவற்றிற்கு வட்டாட்சியர் அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் 2ஆவது கட்டமாக நடத்தப்படுகிறது.


மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் உரிய விண்ணப்பங்களை பெற்று தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளுதல், பெயர் திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல், குடியிருப்பு மாறியவர்கள் ஆகியனவற்றிற்கு இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)