Monday, August 1, 2022
ராமநாதபுரத்தில் குரூப்- 1 மற்றும் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி!!
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி.
குரூப்- 1 மற்றும் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாநில அரசு பணிகளுக்கான
போட்டித்தேர்வுகள் மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து
தயாரா கிவரும் இளைஞர்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
இங்கு
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், மாதாந்திர இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் அடங்கிய
நூலகம் செயல்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கான
இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில்
கலந்து கொண்ட பலர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில்
பணியாற்றி வருகின்றனர்.
தற்போது
அறிவிக்க ப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
தேர்வு (தொகுதி-I) மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய 2-ம் நிலைக் காவலர்
(ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும்
தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த
தேர்வுகளுக்கான அறிமுக வகுப்பு வருகிற 3-ந் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இதில்
பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அறிமுக
வகுப்பு நாளில் மார்பளவு புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன்
கலந்து கொள்ளலாம்.
பயிற்சி
தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை
நேரிலோ அல்லது 9487375737 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொண்டும் பதிவு செய்து இப்பயிற்சி
வகுப்பில் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, July 22, 2022
ராமநாதபுரம் மாவட்டம் சமையல் எரிவாயு குறை தீர் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது!!
ராமநாதபுரம்
மாவட்டம் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடனை, பரமக்குடி,
கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு
விநியோகம் தொடர்பாக,
பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதாக
எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடனான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற
27-ந் தேதி மாலை 5.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.
வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Wednesday, July 20, 2022
வேளாண்மை இயந்திரங்கள் மானிய விலையில் வாங்க ஓர் அறிய வாய்ப்பு!!
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள்
விளைவித்த பொருள்களை சந்தைப்படுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்புகளை குறைத்து சேமிப்புக்கால
அளவை அதிகரித்து மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள்
மானிய விலையில் விற்கப்படுகின்றன.
எண்ணெய்
பிழிந்தெடுக்கும் செக்கு,
தேங்காய்
மட்டை உரிக்கும் எந்திரம்,
சிறிய
பருப்பு உடைக்கும் எந்திரம்,
சிறிய
வகை நெல் அரைவை எந்திரம்,
தானியம்
அரைக்கும் இயந்திரம்,
நிலக்கடலை
தோள் உரித்து வகை பிரிக்கும் எந்திரம்,
கேழ்வரகு
சுத்தப்படுத்தி கல் நீக்கும் எந்திரம்,
மாவரைக்கும்
எந்திரம்,
தீவனம்
அரைக்கும் எந்திரம்
ஆகியவை
40 சதவிகித மானியம் அல்லது அரசு நிா்ணயித்த உச்சவரம்புத் தொகையில் எது குறைவோ அது மானியமாக
வழங்கப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் பிரிவு
மற்றும்
பரமக்குடியில் உள்ள வேளாண்மைப்பிரிவு உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைத் தொடா்பு
கொண்டு தகவல் பெறலாம்.
Wednesday, July 6, 2022
மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள்; முதல் பரிசாக ரூ.10ஆயிரம்!!
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனித்துவ
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.7.1967ம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்
ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும்
பேச்சுப்போட்டிகள் நடத்த அரசு அறிவித்துள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்
பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற
8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் ராமநாதபுரம், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும்
மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே
முதல்
பரிசாக ரூ.10ஆயிரம்,
2-ம்
பரிசாக ரூ.7ஆயிரம்,
3-ம்
பரிசாக ரூ.5ஆயிரம்
மற்றும்
பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
10
தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்,
போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு
அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் மொபைல் போன் வாயிலாகவோ (99522 80798) நேரிலோ அணுகலாம்.
அரசு ஒதுக்கீட்டில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை!!
பரமக்குடி
அரசினா் தொழிற்பயிற்சி மைய முதல்வா் குமரவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம்
மாவட்டம் பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூரில் அரசினா் மற்றும் தனியாா்
தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன.
இவற்றில் அரசு ஒதுக்கீட்டில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த மையங்களில் பற்ற வைப்பாளா் (வெல்டா்), தச்சா், கணினி இயக்குபவா், மின்காந்தவியலாளா், தையல் தொழில்நுட்பம் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கம்மியா் மோட்டாா்
வாகனம், பொருத்துநா், கடைசலா், மின்சாரப் பணியாளா், கம்பியான், பின்னலாடை தொழில் நுட்பவியலாளா்,
எந்திர பட வரையாளா், கம்மியா், மின்னணுவியல், குளிா்பதனம், தட்பவெப்பநிலை தொழில் நுட்பவியலாளா்,
எந்திர வேலையாளா் ஆகிய 2 ஆண்டு தொழிற்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.
www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.
Friday, June 24, 2022
ராமநாதபுரத்தில் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரத்தில்
பட்டணம்காத்தான் பகுதியில் கட்டப்பட்டுள்ள வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில்
வீடுகளைப் பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம்கள் வரும் 28, 29 (செவ்வாய், புதன்) ஆகிய
தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம்
பட்டணம்காத்தான் பகுதியில் 264 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
வீடுகள்
ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளன.
நகர்ப்புற
வீடற்ற, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன.
இதில்
பயனடைய விரும்புபவர்கள் வரும் 28 மற்றும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் பங்கேற்கலாம்.
பயனாளிகள்
ரூ.5 ஆயிரத்துக்கான கேட்பு வரைவோலையை செயற்பொறியாளர்,
தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
என்ற
முகவரிக்கு விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
Thursday, June 23, 2022
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 27ம் தேதி எரிவாயு முகவர்களுக்கான குறைதீர் கூட்டம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் எரிவாயு முகவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 27 ஆம் தேதி (திங்கள்கிழமை)
நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி,
கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம்
தொடர்பான குறைகளை மக்கள் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில், குறைதீர்க்கும் கூட்டம்
நடைபெறவுள்ளது.
ஜூன்
27 மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறவுள்ள
இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.
அதில்,
எண்ணெய் நிறுவன நிர்வாகிகள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்கின்றனர்.
எனவே,
சமையல் எரிவாயு பயன்படுத்தும் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாகத் தெரிவித்து பயன்பெறலாம்
என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, June 22, 2022
ராமநாதபுரத்தில் ஜூன் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!
ராமநாதபுரம்
வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வழக்கமாக வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமானது,
வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரான செ. மதுகுமார் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக்
குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வாரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் தனியார் வேலைவாய்ப்பு
முகாம் நடைபெற்று வருகிறது. அதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தோர் முதல் பட்டதாரிகள்
வரையில் தகுதிக்கு ஏற்ப தனியார் துறையினர் தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்து
பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில்,
ஜூன் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நடைபெறுவதால்,
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு
முகாமை, வியாழக்கிழமை (ஜூன் 23) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே,
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை,
குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வியாழக்கிழமை காலையில், ராமநாதபுரம் பட்டினம்காத்தானில்
உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில், பொதுவான பொறியியல் பட்டப்படிப்பில்
சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோ. ஜெகன் செவ்வாய்க்கிழமை
விடுத்தள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்-தேவிபட்டினம்
சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பொறியியல் பட்டப்படிப்பில்
சேருவோர் விண்ணப்பிக்கும் வகையில் இணையதள சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
பொறியியல் பட்டப்படிப்பில் சேருவோருக்காக அமைக்கப்பட்ட 110 மையங்களில், இக்கல்லூரி
வளாக மையமும் ஒன்றாகும். எனவே, இக்கல்லூரி வளாகத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி, தினமும்
காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.
விண்ணப்பிக்க
விரும்புவோர், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து கல்லூரிக்கு நேரில்
வரவேண்டும். உரிய அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.