Wednesday, November 1, 2023
ரோட்டரி கிளப் நடத்திய மாவட்டம் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்!!
இராமநாதபுரம்
மாவட்டம் அளவில் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் , ரோட்டரி கிளப் மூலம் நடைபெற்றது.
வேலுமனோரன்
பெண்கள் கலை கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயது பிரிவில் கீழக்கரை இஸ்லாமியா
பள்ளியை சேர்ந்த
H.Hameed Al Zehran ,6 ஆம் வகுப்பு, 3 வது இடம் பெற்றார்.
ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் அடிப்படையில் அவர் மூன்றாம் இடம் பெற்றார்.
இந்த
நிகழ்வில் ரோட்டரி கிளப் சேர்ந்த திரு. சுந்தரம் மற்றும் மருத்துவர் ராசிக்தீன் கலந்து
கொண்டு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர்.
செய்தி: ஹமீது ராஜா, விளையாட்டு பயிற்சியாளர்
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு!!
Wednesday, October 18, 2023
கீழக்கரையில் நடைபெற்ற ராமநாதபுரம் ஓபன் மாவட்ட மகளிர் கைப்பந்துப் போட்டி!!
முகமது சதக் அறக்கட்டளை மற்றும் VTeam இணைந்து
15.10.2023 அன்று கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில், பெண்களுக்கு இடையே விளையாட்டுத்
தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் ஓபன் மாவட்ட மகளிர் கைப்பந்துப் போட்டி நடந்தது.
சிறந்த கைப்பந்து நடுவர் விருது:
1.கார்த்தி, தமிழ்நாடு மாநில நடுவர்.
2. நாகூர்கனி, தமிழ்நாடு மாநில நடுவர்.
3. சாமுவேல், தமிழ்நாடு மாநில நடுவர்.
சிறந்த பயிற்சியாளர் விருது:
1. ஹமீத் ராஜா, ஜே.வி.சி,கிழக்கரை.
2. கார்த்தி, ஆர்எஸ்விபி, பரமக்குடி.
3. சுமதி, வேலுமனோகரன் கலைக் கல்லூரி, ராம்நாடு.
4. சவரி, செய்யது அம்மாள் கல்லூரி, ராம்நாடு.
மேலும் சிறந்த 9 வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு
ரொக்கப் பரிசு ரூபாய் 13000 வழங்கினார் Dr.P.R.L சதக் அப்துல் காதர்
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, P.R.L சதக் அப்துல் காதர், S.S.A ஹுசைன் ஜலால், யூசுப் சாஹேப், S.M.Yஅஸ்லம் ஹுசைன், M.M.K முகமது காசிம் , M.M.K மொஹைதீன் இப்ராஹிம், ஷேக் உசேன், ESM பைசல், SMY சதக் ஆகியோர் கலந்து கொண்டு வீராங்கனைகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.
வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர்க்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்கிறோம்.
Thursday, October 5, 2023
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 7-ந்தேதி நெடுந்தூர ஒட்டப்போட்டி!!
மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையாக அண்ணா நெடுந்தூர ஒட்டப்போட்டி ராமநாதபுரம்
மாவட்டத்தில் வரும் 7-ந்தேதி நடத்தப்படுகிறது.
அதன்படி 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.
ஆண்கள்
17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் 8 கி.மீ,
5 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 கி.மீ,
பெண்கள்
17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் 5 கி.மீ,
25 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கி.மீ.
தூரத்திற்கு நெடுந்தூர ஒட்டப்போட்டி நடத்தப்படும்.
இந்த போட்டிகள் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். சாலை பிரிவில் 7-ந்தேதி காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
போட்டியில் பங்குபெறும் அனைவரும் உடற்தகுதி குறித்து சுயஉறுதிமொழி படிவம்
தரவேண்டும். 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர்,
கல்லூரி முதல்வரிடம் வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். ஆதார்கார்டு, பள்ளி, கல்லூரி
அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார்கார்டு
கொண்டு வர வேண்டும்.
இப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.5000, ரூ..3000, ரூ.2000
வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கப்படும்.
இதில், கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் உடல் தகுதி குறித்து சுய உறுதிமொழி
படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயது சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நாளை(வெள்ளிக்கிழமை)
மாலை 6 மணிக்குள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பதிவுசெய்து
கொள்ள வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தி: தினத்தந்தி
Wednesday, October 4, 2023
கீழக்கரையில் நடைபெற்ற JVC கைப்பந்து போட்டி!!
27 அணிகள் கல்ந்து கொண்ட இந்த போட்டித்தொடரில் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தினர்.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஏர்வாடி EIFA மற்றும் கீழக்கரைJVC சிறப்பாக விளையாடினர்.
முடிவுல் ஏர்வாடி EIFA வெற்றிக்கோப்பையை வென்றது.
கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு பெற்றா அணிகளின் விபரம்:
1 PRIZE -ஏர்வாடி EIFA
2 PRIZE-கீழக்கரைJVC
3 PRIZE- ஏர்வாடி RASITH FRIENDS
4 PRIZEகீழக்கரைJVC-B
5 PRIZE கீழக்கரை CVC
6 PRIZE கீழக்கரை CVC
7 PRIZE மதுரை
8 PRIZE மண்டபம்
தகவல்:
ஹமீது ராஜா, கைப்பந்து பயிற்சியாளர்
Friday, September 15, 2023
இராமநாதபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான, பெண்கள் கைப்பந்து போட்டி!!
முதலமைச்சர்
கோப்பைக்கான, பெண்கள் கைப்பந்து பிரிவு போட்டி இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில்,
இராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி முதல் இடம் பெற்று, கோப்பையை வென்றது.
ரொக்கப்பரிசாக ரூ.36,000/- வழங்கப்பட்டது
கீழக்கரை
தாசீம் பீவி அப்துல் காதிர் பெண்கள் கல்லூரி,இரண்டாம் இடம் பெற்றது ரொக்கப்பரிசாக ரூ.24,000/-
வழங்கப்பட்டது
இந்த
போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் பாத்திமா நவ்ரா மற்றும் தீபிகா இருவரும் மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செய்தி:
VTeam Social Trust
பெண் குழந்தைகளுக்கான மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய
பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக
பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின்
விருது வழங்கப்பட உள்ளது.
இதற்காக
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு
விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் 31-ன்படி 13 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள்
விண்ணப்பிக்கலாம்.
பெண்
குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திரும
ணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை,
பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிவற்றிற்கு தீர்வு காண்பதற்கு
ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆண்கள்
மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று
சாதித்திருத்தல் போன்ற வற்றின் அடிப்படையில் விருது வழங்கப்படும்.
இந்த
விருதுக்கான விண்ணப்பங்களை வருகிற அக்டோபர் 27-ந் தேதிக்குள்
மாவட்ட
சமூகநல அலுவலர்,
மாவட்ட
சமூகநல அலுவலகம்,
மாவட்ட
கலெக்டர் அலுவலக வளாகம்,
ராமநாதபுரம்
என்ற
முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tuesday, August 29, 2023
ராமநாதபுரத்தில் வரும் 31-ந் தேதி மாராத்தான் போட்டி!!
மாவட்ட
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்தின விழா
கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த
ஆண்டு வினாடி வினா, நாடகம், ரீல்மேக்கிங் நடத்தப்பட்டன.
தொடர்ந்து
மாரத்தான் போட்டி 31-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில்
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும்
திருநங்கைகள் என மொத்தம் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டி
காலை 7 மணிக்கு ராமேசுவரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு முதல் பேராவூர் வரை 5 கிலோ
மீட்டர் தூரம் நடைபெற உள்ளது. போட்டியை கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
வெற்றிபெறும்
மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5
ஆயிரம் மற்றும் 7 மாணவர்களுக்கு தலா ரூ.ஆயிரமும் வழங்கப்படும்.
போட்டிகளில்
கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் மாவட்டத்தை சேர்ந்த
கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.
Saturday, August 5, 2023
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய
மகளிர், மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்கள் மின் மோட்டர் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்
பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து
அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர்,
பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார்
பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இதற்கு
தையல் தைக்க தெரிந்த தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்துடன்
வருமானச் சான்று ரூ.72,000-க்குள்,
இருப்பிடச்
சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
தையல்
பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது),
6
மாத கால பயிற்சி, வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது
பிறப்புச் சான்று,
ஜாதிச்
சான்று,
கடவுச்
சீட்டு
விண்ணப்பதாரரின்
வண்ணப் புகைப்படம்-2,
விதவை,
கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மகளிர், மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல்,
ஆதார்
அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அடுத்த
மாதம் செப். 15- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகுதி வாந்த நபர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.