Friday, September 15, 2023
இராமநாதபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான, பெண்கள் கைப்பந்து போட்டி!!
முதலமைச்சர்
கோப்பைக்கான, பெண்கள் கைப்பந்து பிரிவு போட்டி இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில்,
இராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி முதல் இடம் பெற்று, கோப்பையை வென்றது.
ரொக்கப்பரிசாக ரூ.36,000/- வழங்கப்பட்டது
கீழக்கரை
தாசீம் பீவி அப்துல் காதிர் பெண்கள் கல்லூரி,இரண்டாம் இடம் பெற்றது ரொக்கப்பரிசாக ரூ.24,000/-
வழங்கப்பட்டது
இந்த
போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் பாத்திமா நவ்ரா மற்றும் தீபிகா இருவரும் மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செய்தி:
VTeam Social Trust
பெண் குழந்தைகளுக்கான மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய
பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக
பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின்
விருது வழங்கப்பட உள்ளது.
இதற்காக
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு
விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் 31-ன்படி 13 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள்
விண்ணப்பிக்கலாம்.
பெண்
குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திரும
ணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை,
பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிவற்றிற்கு தீர்வு காண்பதற்கு
ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆண்கள்
மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று
சாதித்திருத்தல் போன்ற வற்றின் அடிப்படையில் விருது வழங்கப்படும்.
இந்த
விருதுக்கான விண்ணப்பங்களை வருகிற அக்டோபர் 27-ந் தேதிக்குள்
மாவட்ட
சமூகநல அலுவலர்,
மாவட்ட
சமூகநல அலுவலகம்,
மாவட்ட
கலெக்டர் அலுவலக வளாகம்,
ராமநாதபுரம்
என்ற
முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tuesday, August 29, 2023
ராமநாதபுரத்தில் வரும் 31-ந் தேதி மாராத்தான் போட்டி!!
மாவட்ட
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்தின விழா
கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த
ஆண்டு வினாடி வினா, நாடகம், ரீல்மேக்கிங் நடத்தப்பட்டன.
தொடர்ந்து
மாரத்தான் போட்டி 31-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில்
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும்
திருநங்கைகள் என மொத்தம் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டி
காலை 7 மணிக்கு ராமேசுவரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு முதல் பேராவூர் வரை 5 கிலோ
மீட்டர் தூரம் நடைபெற உள்ளது. போட்டியை கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
வெற்றிபெறும்
மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5
ஆயிரம் மற்றும் 7 மாணவர்களுக்கு தலா ரூ.ஆயிரமும் வழங்கப்படும்.
போட்டிகளில்
கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் மாவட்டத்தை சேர்ந்த
கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.
Saturday, August 5, 2023
ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய
மகளிர், மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்கள் மின் மோட்டர் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்
பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து
அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம்
மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர்,
பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார்
பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இதற்கு
தையல் தைக்க தெரிந்த தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்துடன்
வருமானச் சான்று ரூ.72,000-க்குள்,
இருப்பிடச்
சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
தையல்
பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது),
6
மாத கால பயிற்சி, வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது
பிறப்புச் சான்று,
ஜாதிச்
சான்று,
கடவுச்
சீட்டு
விண்ணப்பதாரரின்
வண்ணப் புகைப்படம்-2,
விதவை,
கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மகளிர், மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல்,
ஆதார்
அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அடுத்த
மாதம் செப். 15- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகுதி வாந்த நபர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Saturday, July 22, 2023
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், கிராமப்பகுதிகளில் அரசு ஆரம்ப
சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி
இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணிபுரிய வில்லை. பெரும்பாலான இடங்களில்
பணியிடங்கள் காலியாகவே உள்ளது.
அரசு
மருத்துவமனைக்கு தினமும் குறைந்தது 400-க் கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார
நிலையங் களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள்
நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு வருபவர் களுக்கு டாக்டர்,
நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க வழி இல்லை.
இது
தவிர பெரும் பான்மையான மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு
டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு வரும்
கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.
இந்த
கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பா விதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே
அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை
தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:
தினசரிகள்
Thursday, July 20, 2023
ராமநாதபுரம் பஸ் நிலையம் தற்காலிகமாக இடமாற்றப்படுகிறது!!
ராமநாதபுரம்
ரூ.20 கோடியில் ராமநாதபுரம் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் இன்று முதல்
பஸ் நிலையம் இடமாற்றப்படுகிறது. பயணிகள் வசதிக்காக தற்காலிகமாக 2 இடங்களில் இருந்து
பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் இயங்கி வந்தது. இந்த பஸ் நிலைய கட்டிடம்
மிகவும் பழுதடைந்து அடிக்கடி பயணிகள் மீது இடிந்து விழுந்ததால் இந்த பஸ் நிலையத்தை
முழுவதுமாக இடித்து விட்டு ரூ.20 கோடி செலவில் புதிதாக கட்ட அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கனவே 22 பஸ்கள் நிறுத்தக்கூடிய இடம், 45 கடைகளுடன் இயங்கி வந்த இந்த பஸ் நிலையம்
இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்து 35 பஸ்கள் நிறுத்தும் இடம், 90 கடைகள் கட்டப்பட உள்ளது.
இதற்காக பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டு பாதி கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது. மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டி இருந்ததால் நேற்று வரை இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை, ராமேசுவரம், திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், சாயல்குடி, கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இன்று(வியாழக்கிழமை) முதல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, கோவை, ஈரோடு, சேலம், முதுகுளத்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தற்போதைய பஸ் நிலையம் அருகே சந்தை திடலில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட உள்ளது.
இந்த பஸ்கள் விரைவில் மதுரை ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் தெரிவித்தனர். இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ள நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் பல லட்ச ரூபாய் செலவில் சிமெண்டு தளம், கழிப்பறை, தற்காலிக கடைகள், மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனை கலெக்டர் விஷ்ணுசந்திரன், பயிற்சி சப்-கலெக்டர் நாராயணசர்மா, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஆணையாளர் அஜிதாபர்வீன் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Thursday, June 15, 2023
ராமநாதபுரத்தில் வரும் ஜூன் 16ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்!!
தமிழக
அரசின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைதேடும்
இளைஞர்களுக்காக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த
முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐ.டி.ஐ. மற்றும்
டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு பணி நியமனம் பெறலாம். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்
மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல்
கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை
(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
தனியார்
நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும்
ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும்
தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் TamilNadu Private Job Portal
tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இதில் பதிவு செய்து தனியார்
துறை நிறுவனங்களும் வேலைதேடும் இளைஞர்களும் பயன்பெறலாம்.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
Monday, May 29, 2023
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விற்பனை அங்காடி இயக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம்
மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய
மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் வழங்கப்படுகிறது. இந் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
மதி
எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் சுய உதவிக்குழு உறுப்பி
னராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால்
கைவிடப் பட்ட மாற்றுத்தி றனாளிகள், மாற்றுத்தி றனாளி விதவைகள், முதிர் கன்னி மாற்றுத்திறனாளிகள்
மற்றும் ஆண் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே வாகன விற்பனை அங்காடி வழங்கப்படும்.
தேர்வு
செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சிறப்பு சுய உதவிக்குழு
உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்கள் சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓரு ஆண்டிற்கு
மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். வாகன அங்காடிக்கு வாடகை NRLM இணையதளத்தில்
பதிந்து செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும்
விற்பனை சங்கத்திடமே இருக்கும்.
அங்காடி
நடத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ,
வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகனத்தில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதை பயனாளிகளே
மேற்கொள்ள வேண்டும். வாகனத்திற்கு பயனாளியே மின்னேற்றம் (Electric Charge) செய்து பயன்படுத்த
வேண்டும். வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை
சங்கத்திடம் வாகனத்தை எவ்வித பழுதுமின்றி ஒப்படைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும்
உறுப்பினரிடம் இருந்து வாகன அங்காடி திரும்ப பெறப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு
மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி திரும்ப பெறப்பட்டு தகுதியான வேறு
பயனாளிக்கு வழங்கப்படும். தகுதியுள்ள மாற்றுத்தி றனாளிகள் தங்களது விண்ணப்பங்களை வருகிற
31-ந் தேதிக்குள்
திட்ட
இயக்குநர்,
மகளிர்
திட்டம்,
கலெக்டர்
அலுவலகம் வளாகம்,
ராமநாதபுரம்
என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) நகல் களையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, May 19, 2023
''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான
பணியாளர் தேர்வாணையம் (SSC),
ரயில்வே
தேர்வு வாரியம் (RRB),
வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS)
உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
மேற்கண்ட
மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள்
பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி
வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதில்
கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள்
வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக
https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து
கொள்ள வேண்டும்.
இது
குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.