Tuesday, July 9, 2024
இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான மகளிர் இறகுப்பந்து போட்டி!!
இராமநாதபுரம்
மாவட்டத்தில் பெண்களுக்கு இறகு பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான மகளிர் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.
இராமநாதபுரம்
மாவட்ட இறகுப்பந்து கழகம் மற்றும் VTeam(NGO)
- இணைந்து, 07.07.2024 (ஞாயிறுக்கிழமை) அன்று இராமநாதபுரம் SDAT உள் விளையாட்டு அரங்கத்தில்
சிறப்பாக நடத்தியது.
இப்போட்டிக்கு,
தலைமை விருந்தினராக திரு. துரை ஐ.பி.எஸ் அவர்கள்,
கெளரவ விருந்தினர்களாக திரு. M.தினேஷ் குமார் (மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்)
திரு. KBM நாகேந்திர சேதுபதி (ராஜா - இராமநாதபுரம் மற்றும் புரவலர் - இராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழகம்,
MMK முஹம்மது காசிம் மரைக்காயர் - பொறுப்பாளர் VTeam
மற்றும்
வள்ளல் காளிதாஸ் - இணைச்செயலாளர் இராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழகம்
ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
இந்த
போட்டி பள்ளி, கல்லூரி மற்றும்
பொது பிரிவு மகளிர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.
இதில்
70 பெண்கள் கலந்து கொண்டனர். 24 தனி நபர்களுக்கு முதல் பரிசு ரூ 3000 + கேடயம் மற்றும் இரண்டாம் பரிசு ரூ. 1500 + கேடயம் வழங்கப்பட்டது.
இறுதியில்
வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும், புரவலர்களுக்கும், நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்தி:
கீழை ஹமீது ராஜா, பயிற்சியாளர்.
Wednesday, June 12, 2024
ராமநாதபுரம் மாவட்டத்தில் விலையில்லா மரக்கன்றுகள்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்திட விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்படும் என மாவட்ட
வன அலுவலர் ஹேமலதா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
இது
குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:
ராமநாதபுரம்
வன விரிவாக்கச் சரகத்தின் கீழ் பரமக்குடி அருகே கமுதகுடி கிராம வனத் துறை மத்திய நாற்றங்காலில்
மகாகனி,
மா,
வேங்கை,
கொய்யா,
புளி,
வேம்பு,
மாதுளம்,
சொர்க்கம்
ஆகிய
மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்
மாவட்ட மக்கள் விவசாய நிலம், பள்ளிக் கூடம், பொது இடம், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட
இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்க, தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், சிட்டா
(தேவைப்படின்)ஆகியவற்றை சமர்பித்து விலையில்லா மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு,
வனசரக
அலுவலர் வெ.நாகராஜன் 6383940433.
வனவர்
கேசவன் 9976969370.
Thursday, June 6, 2024
ராமநாதபுர மக்களவை தொகுதியை தக்கவைத்தது திமுக கூட்டணி!!
திமுக கூட்டணியில்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் எம்.பி
நவாஸ்கனி செய்தியாளரிடம் கூறும்போது,
‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த சிறப்பான திட்டங்களுக்காக மக்கள் கொடுத்த மாபெரும் வெற்றியாகும். இங்கு சாதியையும், மதத்தையும் வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு சரியான பாடம் புகட்டி உள்ளது.
பாசிச பாஜக ஆட்சிக்கு
எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு
கடற்கரை சாலையோர ரயில் போக்குவரத்து திட்டம் துவங்கவும், படித்த இளைஞர்கள் பெண்களின்
நலனுக்காக வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்சாலை அமைக்கவும், ராமேஸ்வரம் ஆன்மீக தேசிய
சுற்றுலா தளம் என்பதாலும், ராமநாதபுரம் மாவட்டம் வர்த்தக மாவட்டமாக இருப்பதாலும் விமான
போக்குவரத்து துவங்கவும் நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்
Friday, May 31, 2024
மெடிக்கல்களில் சிசிடிவி கேமிராக்கள் அவசியம் – கலெக்டர் உத்தரவு!!
ராமநாதபுரம்
மாவட்டத்திலுள்ள மெடிக்கல்களில் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்துவது அவசியம் என கலெக்டர்
விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள்
1945ல் அட்டவணைகள் குறிப்பிட்டுள்ள மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும்
குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும் இன்றைய
நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
தவறும்
பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்டறியப்படும்
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர் மீது மேற்கண்ட இந்த
உத்தரவினை பின்பற்றாத காரணத்திற்காக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
Tuesday, May 7, 2024
+2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 94.89 சதவீத தேர்ச்சி!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் 94.89 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 17வது இடம் பிடித்துள்ளனர்.
தமிழகம்
முழுவதும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச்
22ம் தேதி முடிவடைந்தது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில், 63 மையங்களில்
71
அரசு மேல்நிலைப் பள்ளிகள்,
36
அரசு உதவி பெறும் பள்ளிகள்,
53
மெட்ரிக் பள்ளிகள்,
ராமநாதபுரம்
மாதிரி பள்ளி ஒன்று
என
161 பள்ளிகளிலிருந்து 6,302 மாணவர்களும், 7,247 மாணவிகளும் என மொத்தம் 13,549 பேர்
தேர்வு எழுதினர்.
இந்நிலையில்
நேற்று தேர்வு முடிவுகள் வந்த நிலையில் 5,850 மாணவர்கள், 7,007 மாணவிகள் என 12,857
பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில்
மாணவர்கள் 92.83 சதவீதம், மாணவிகள் 96.69 சதவீதம் என மொத்தம் 94.89 சதவீதம் தேர்ச்சி
பெற்றனர்.
இதில்
71 அரசு மேல்நிலை பள்ளிகளில் 19 பள்ளிகள், 36 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 பள்ளிகளும்,
53 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37 பள்ளிகள் என மொத்தமுள்ள 161 பள்ளிகளில் 60 பள்ளிகள்
100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
Thursday, May 2, 2024
மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!!
சமுதாய
வளர்ச்சிக்கு சேவையாற்றுபவர்கள் முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த விருது ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும்.
15
முதல் 35 வயது வரை உள்ள தலா மூன்று ஆண், பெண்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ்,
பதக்கம் வழங்கப்படும்.
2023--24
நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டும் பரிசீலிக்கப்படும். 5 ஆண்டுகள் தமிழகத்தில்
குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைதள முகவரியில்(www.sdat.tn.gov.in)
விண்ணப்பங்களை மே 15 க்குள் சமர்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர்நலன் அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்
என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
Monday, March 11, 2024
சவுதி அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியின் வருடாந்திர வாலிபால் பேட்டி!!
சவுதி
அரேபியா ஜித்தா மாநகரில் அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியில் வருடாந்திர வாலிபால்
பேட்டி கடந்த மார்ச் மாதம் 3,5
& 7 தேதிகளில் நடந்து முடிந்தது.
இதில்
6 அணிகள் கலந்து கொண்டது.
வெற்றி
பெற்ற மூன்று அணிகளுக்கு வெற்றி கோப்பை, மெடல்கள், மற்றும் ரொக்க பரிசுகளை இந்த கம்பேனியின்
இயக்குனர் SAS சதக்கத்துல்லா, மேலாளர்கள் சீனி அலி, மஹ்ரூப் அப்துல் காதர், நீயாசுதீன்
மற்றும் அஸ்மாவில் ஆகியோர் வழங்கினார்கள்.
செய்தி:
பயிற்சியாளர் ஹமீது ராஜா
Tuesday, February 20, 2024
கீழக்கரை பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!!
கீழக்கரை
பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!!
பிப்.19-ம்
தேதி கீழக்கரை முஹைத்தீனியா பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்களும்
பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி மாணவர்களுக்கான இண்டராக்ட்
கிளப் தொடங்கப்பட்டது.
இதையொட்டி
கீழக்கரை ரோட்டரி சங்கம், கீழை கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் ஆகியவற்றின்
பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின்
முடிவில் பள்ளி முதல்வர் அஸ்வத் உம்மா நன்றி கூறினார்.
Monday, January 22, 2024
சவுதி அரேபியாவில் நடைபெற்ற கீழை-சவுதி அமைப்பின் மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு!!
கீழை
சவுதி அமைப்பின் சார்பாக, கீழக்கரை மக்களின் ஒன்றுகூடல், சவுதி அரேபியாவின் ஜித்தா
நகரத்தில் சிறப்பாக நடந்தேறியது.
இந்த
நிகழ்வில், அமைப்பின் கவுரவ தலைவர் ஜனாப்.முகைதீன் சீனி அலி அவர்கள் தலைமை வகிக்க,
இதர உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை
கீழை.இர்ஃபான் அவர்கள் கிராஅத் ஓத துவங்கி வைத்தார். முகைதீன் சீனி அலி அவர்கள் நமது
அமைப்பின் நோக்கம் மற்றும் ஊர் மக்கள் ஒற்றுமை பற்றி தலைமையுரை ஆற்றினார்கள். ஜனாப்.தாஹிர்
மற்றும ஜனாப்.ஆசிம் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினர்.