Sunday, April 18, 2021
ராமநாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேர கொரோனா தடுப்பு ஆலோசனை மையம்!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் 24 மணிநேர கொரோனா தடுப்பு ஆலோசனை மையம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர்
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்
பட்டு வருகின்றன. பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு
தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற ஏதுவாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி
நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது.
இந்த
உதவி மையத்தில் சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள் 8 மணி நேர சுழற்சி முறையில் பணியில்
ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த
மருத்துவ குழு அலுவலர்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
உள்ள நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் குறித்து
கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு
விளக்கம் பெற இந்த உதவி மையத்தை 77087 11334, 77082 92732, 77083 57835, 77089
25833 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
செய்தி:
தினத்தந்தி
Wednesday, April 7, 2021
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு
பாதுகாப்பும், கண்காணிப்பு காமிரா வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தேர்தல்
அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
இதுகுறித்து
செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை இரவு கூறியதாவது:
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் சட்டப்
பேரவைத் தொகுதிகளின் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
வாக்கு
பதிவு முடிந்த நிலையில், ராமநாதபுரம்-தேவிபட்டிணம் சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி
வளாகத்தில் 4 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அங்கு
மூன்றடுக்கு பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரங்கள்
உள்ள அறைகளில் தீத்தடுப்பு சாதனங்களும் உள்ளன என்றார்.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் 1,547 மையங்களலும் இரவு 8 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல்
வைக்கும் பணி நடைபெற்றது. பின்னர் அவைகளை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும்
பணி விடிய, விடிய நடைபெற்றது. ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்
பாதுகாப்புடன் அவைகள் கொண்டு செல்லப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 69.24 சதவீதம் வாக்குபதிவு!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மொத்தம் 69.24 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய சட்டப்பேரவைத்
தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை
பிற்பகல் 1 மணி நிலவரப்படி பரமக்குடியில் 38.78 சதவீதமும், திருவாடானையில் 38.70 சதவீதமும்,
ராமநாதபுரத்தில் 36.09 சதவீதமும், முதுகுளத்தூரில் சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாவட்டத்தில் மொத்தம் 37.43 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
மாலை
5 மணி நிலவரப்படி பரமக்குடியில் 62.23 சதவீதமும், திருவாடானையில் 62.30 சதவீதமும்,
ராமநாதபுரத்தில் 50.04 சதவீதமும், முதுகுளத்தூரில் 58.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
மாவட்டத்தில் 51.27 சதவீதமும் பேர் வாக்களித்திருந்தனர்.
இரவு
7 மணி நிலவரப்படி
பரமக்குடி
தொகுதியில் 70.51 சதவீதம்,
திருவாடானை
தொகுதியில் 68.75 சதவீதம்,
ராமநாதபுரம்
தொகுதியில் 67.51 சதவீதம்,
முதுகுளத்தூர்
தொகுதியில் 70.35 சதவீதம்
என
மாவட்டத்தில் 69.24 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் மொத்த வாக்குகளில் 3 லட்சத்து
76697 ஆண்களும், 4 லட்சத்து 29,999 பெண்களும் என மொத்தம் 8,05,701 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இதில் 5 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, April 4, 2021
உதய சூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் தி.மு.க காதர்பாட்சா முத்து ராமலிங்கம்!!
மாவட்ட
தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம்
மேற் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
ராமநாதபுரம்
சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக
போட்டியிடும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தொகுதி முழுவதும்
சுற்றுப்பயணம் மேற் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம்
செய்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து
வருகின்றனர்.
ராமநாதபுரம்
தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் 3-ம் கட்டமாக பாம்பன், தங்கச்சி
மடம், மரைக்காயர் பட்டிணம், வேதாளை, சாத்தக்கோ வலசை உள்பட பல கிராமங்களுக்கு சென்று
பிரசாரம் மேற் கொண்டார். ஊர் பிரமு கர்கள் மற்றும் இளைஞர்கள் அவரை கிராமத் திற்குள்
குதிரையில் அழைத்து சென்று வரவேற்பளித்தனர். கிராம பகுதியில் விளை யாடிக்கொண்டிருந்த
இளைஞர்களுடன் சேர்ந்து காதர்பாட்சா முத்துராம லிங்கம் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார்.
பல கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பேரணி யாக சென்று வாக்கு சேகரித்தார்.
வாக்காளர்கள்
மத்தியில் காதர்பாட்சா முத்துராம லிங்கம் பேசியதாவது:-
தமிழகம்
தலை நிமிர, தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடம் கிடைக்க,அனைவரும்
பிரிவினை இன்றி சம உரிமையுடன் சமத்துவமாக வாழ, அனைத்து துறை களிலும் பாழ்பட்டு கிடக்கும்
தமிழகத்தை மீட்டெடுக்க தலைவர் ஸ்டாலின் தலை மையில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் மட்டுமே
தமிழினம் காப்பாற்றப்படும் என்பதை ஒவ்வொரு வாக் களரும் மனதில் வைத்து வரும் 6ந் தேதி
உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்களின் மானத்தை, சுயமரியா தையை, அடிப்படை உரிமைகளை காக்க, தமிழ் மொழி, கலாச்சாரம்,
பண் பாட்டை காக்க மவுன புரட்சி நடத்தி
தி.மு.க. வை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டனர் என்பது செல்லும் இடமெல்லாம்
மக்களின் உணர்வுகளில் தெரிகிறது.
அதேபோல
ராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக
என்னை வெற்றி பெறச் செய்யுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். தனுஷ்கோடி தென் கடலில் தூண்டில்
வளைவு துறைமுகம், மீனவகிராமங் களில் சமுதாய கூடங்கள், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர்
வசதி, சாலை வசதி, தடையற்ற மின் வினியோகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறை
வேற்றித்தர உறுதி கூறுகிறேன்.காவிரி குடிநீர் அனைத்து பகுதிக்கும் வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும். மகளிர் மற்றும் சுயஉதவி குழுவி னருக்கு அரசின் நிதி மற்றும் கடன் உதவி
கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனை வரின் கோரிக்கைகளும்
நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசி னார். அவருடன் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் கூட்டணி
கட்சி நிர்வாகிகள் திரளாக உடன் சென்றனர்.
Monday, March 29, 2021
வாலிநோக்கத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் வெற்றி!!
வாலிநோக்கத்தில்
நடைபெற்ற மாநில அளவிலான அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் 4ம் மற்றும்
5ம் இடங்கள் பெற்றன.
4ம்
பரிசாக பழநிபாபா மாணவர்கல் அணிக்கு ரூ.8000/- மற்றும் கோப்பையும்
5ம்
பரிசாக JVC அணிக்கு ரூ.5000/- மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
வீரர்களுக்கு
முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.
தகவல்;
ஹமீது ராஜா, கீழை
Sunday, March 21, 2021
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 23 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!!
ராமநாதபுரம்
சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள்
உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்பதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதில்
15 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ராமநாதபுரம்
சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாஜக, திமுக, அமமுக உள்ளிட்ட
பிரதானக்கட்சிகள் உள்பட 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வேட்பு
மனுக்களின் பரிசீலனையானது சனிக்கிழமை காலையில் ராமநாதபுரம் சார்- ஆட்சியர் அலுவலகத்தில்
பொதுத் தேர்தல் பார்வையாளர் சொரப்பாபு தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலரான சார்-ஆட்சியர்
என்.சுகபுத்ரா முன்னிலையில் நடைபெற்றது.
மனுக்கள்
பரிசீலனைக்கு திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பாஜக வேட்பாளர் து.குப்புராம்,
அமமுக வேட்பாளர் ஜி.முனியசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கண்.இளங்கோ , மக்கள் நீதி
மய்யம் வேட்பாளர் சரவணன் மற்றும் அவர்களுக்கான மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு முதலில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு ஏற்கப்பட்டது.
அதன்பின் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது பாஜக வழக்குரைஞர்கள் தரப்பில் கூட்டுறவு சங்க முறைகேடு புகார் தொடர்பாக திமுக
வேட்பாளர் தகவல் தெரிவிக்கவில்லை என்றனர்.
அதற்கு
திமுக வழக்குரைஞர்கள் சார்பில் விளக்கம் அளித்தனர். இருதரப்பையும் கேட்ட சார்-ஆட்சியர்,
திமுக வேட்பாளர் மனு ஏற்கப்படுவதாக அறிவித்தார். உடனே திமுகவினர் கைதட்டி வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட
23 மனுக்கள் ஏற்கப்பட்டு, 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
செய்தி: தினமணி
Tuesday, March 16, 2021
திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்!!
ராமநாதபுரம்
சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திங்கள்கிழமை
மனுத் தாக்கல் செய்தார்.
முன்னதாக
அவர் திறந்த ஜீப்பில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா உள்ளிட்டோருடன்
சார்- ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே
அவர்கள் வந்த வாகனங்களை காவல் துணைக் கண்காணிப்பாளர் கி. வெள்ளத்துரை. நகர் காவல் ஆய்வாளர்
சரவணசேதுபாண்டிராயர் ஆகியோர் தலைமையிலான போலீஸார் மறித்தனர்.
அவர்களில்
சிலர் சார்- ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால், அவர்களுக்கும் போலீஸாருக்குமிடையே
வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர்
வேட்பாளர், மாற்று வேட்பாளர் மற்றும் இருவர் என 4 பேரை மட்டும் போலீஸார் அனுமதித்தனர்.
இதன் பின் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல்
நடத்தும் அலுவலரானா சார்- ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ராவிடம் மனு தாக்கல் செய்தார். பிறகு
மாற்று வேட்பாளரான கே.வி. மூவேந்தன், மனு தாக்கல் செய்தார்.
மாற்று
வேட்பாளரான கே.வி. மூவேந்தன், திமுக வேட்பாளரான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் சகோதரர்
ஆவார்.
அப்போது
காதர்பாட்சா முத்துராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறும் போது.
தேர்தல்
பிரசாரத்துக்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம்
வருகிறார் என்றார். சொத்துக்கணக்கை காட்டவில்லை: ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு
மனு தாக்கல் செய்த காதர்பாட்சா முத்துராமலிங்கம் சொத்துக் கணக்கை காட்டவில்லை என தேர்தல்
அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு தாக்கலுக்கான கடைசி தேதியான வரும் 19 ஆம்
தேதி மாலை 3 மணிக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்
அவர்கள் கூறினர்.
Tuesday, March 9, 2021
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுபதிவு இயந்திரங்கள்அனுப்பி வைப்பு!!
ராமநாதபுரம்
மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுபதிவு இயந்திரங்கள்
போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்களை சட்டசபை தொகுதிவாரியாக அனுப்பிவைக்க, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கம்ப்யூட்டர் முறை ஒதுக்கீடு கூட்டம் நடந்தது.
மாவட்ட
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது:
பரமக்குடி
-357,
திருவாடானை-
417,
ராமநாதபுரம்-
431,
முதுகுளத்துார்-
442
என
மொத்தம் 1647 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. முதல்நிலை பரிசோதனை முடிந்து 3206 ஓட்டளிக்கும்
இயந்திரங்கள், 1966 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்க கூடிய 2232 இயந்திரங்கள்பாதுகாப்பு
அறையில் உள்ளன.
இவை
தேர்தல்ஆணையம் அறிவித்த கணக்கீட்டின் படி கம்ப்யூட்டர் முறையில் அந்தந்த தொகுதிகளுக்கு
30 சதவீதம் கூடுதலாக கையிருப்பு இருக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த
மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைகூட சேமிப்பு
கிட்டங்கி பாதுகாப்பு அறையிலிருந்து போலீஸ் பாதுகாப்பு உடன் சட்டசபை தொகுதியில் தேர்வு
செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்,' எனக் கூறினார்.
மார்ச் 1 முதல் புறநகர் பஸ் சேவைகளில் 'ஏசி' பஸ்கள்!!
அரசு போக்குவரத்து கழகங்களில் மார்ச் 1 முதல் புறநகர் பஸ் சேவைகளில் 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் மட்டும் தற்போது 10 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. கும்பகோணம் கோட்டம்
ராமேஸ்வரம் கிளையில் இருந்து மதுரைக்கு மூன்று 'ஏசி' பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
இதே போல் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு 1 டூ 1 பஸ் ஒன்றும், ராமநாதபுரத்தில் இருந்து
பட்டுக்கோட்டை, துாத்துக்குடிக்கு தலா ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
இதே
போல் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஒரு பஸ், கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு
ஒரு பஸ் உட்பட மாவட்டத்திற்குள் பத்து 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில்
வழக்கமான கட்டணத்தை விட 30 சதவீதம் அதிகமாக உள்ளது.
கோடை
காலம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும், நீண்ட துார பயணத்தை 'ஏசி'
பஸ்சில் செல்ல விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகளின்
வரவேற்பை பொறுத்து 'ஏசி' பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என அவர்கள் தெரிவித்தனர்.