முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 29, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விற்பனை அங்காடி இயக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

 

ராமநாதபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் வழங்கப்படுகிறது. இந் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

 

மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் சுய உதவிக்குழு உறுப்பி னராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப் பட்ட மாற்றுத்தி றனாளிகள், மாற்றுத்தி றனாளி விதவைகள், முதிர் கன்னி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே வாகன விற்பனை அங்காடி வழங்கப்படும்.

 

தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சிறப்பு சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்கள் சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓரு ஆண்டிற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். வாகன அங்காடிக்கு வாடகை NRLM இணையதளத்தில் பதிந்து செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும்.

 


அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகனத்தில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதை பயனாளிகளே மேற்கொள்ள வேண்டும். வாகனத்திற்கு பயனாளியே மின்னேற்றம் (Electric Charge) செய்து பயன்படுத்த வேண்டும். வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடம் வாகனத்தை எவ்வித பழுதுமின்றி ஒப்படைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் உறுப்பினரிடம் இருந்து வாகன அங்காடி திரும்ப பெறப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி திரும்ப பெறப்பட்டு தகுதியான வேறு பயனாளிக்கு வழங்கப்படும். தகுதியுள்ள மாற்றுத்தி றனாளிகள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள்

திட்ட இயக்குநர்,

மகளிர் திட்டம்,

கலெக்டர் அலுவலகம் வளாகம்,

ராமநாதபுரம்

 

என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) நகல் களையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, May 19, 2023

''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான 

பணியாளர் தேர்வாணையம் (SSC),

ரயில்வே தேர்வு வாரியம் (RRB),

வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) 


உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

 

மேற்கண்ட மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

 


இதில் கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

இது குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

 

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, May 9, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.30 சதவீதம் தேர்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.30 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,790 மாணவர்கள், 7,516 மாணவிகள் ஆக மொத்தம் 14,306 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். திங்கள்கிழமை தேர்வு முடிவுகள் வெளியானது.

 

இதில் 6,413 மாணவர்கள், 7,364 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன்படி மாணவர்கள் 94.45 சதவீதம் பேரும், மாணவிகள் 97.98 சதவீதம் பேரும் ஆக மொத்தம் 96.30 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அரசு உதவிபெறும் 37 மேல்நிலைப் பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. 53 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில்,

43 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மொத்தமாக 160 பள்ளிகளில் 73 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

 




ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97.20 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்றது. நிகழாண்டு 96.30 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 12-ஆவது இடத்துக்கு சென்றது.

 

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து கூறியதாவது:

17 பள்ளிகளில் முழுமையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் தேர்வு எழுதியதால் கடந்தாண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்தது. இதுகுறித்து அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


முகவை முரசு சார்பாக மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, April 5, 2023

BESPOKE DESIGNER ஷோரூம்; மதுரையில் ஓர் புதிய உதயம்!!

No comments :

 

மதுரையில் ஓர் புதிய உதயம்.


கே. கே. நகர், ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் அருகில் கீழக்கரை சேர்ந்த FB குழுமம் மற்றும் மதுரை சேர்ந்த சகோதரர் ரபீக் அவர்களால்  BESPOKE DESIGNER ஷோரூம் திறக்கப்பட்டு உள்ளது.







தாங்கள் அனைவரும் வருகை தந்து, ஆதரவு தந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றனர் உரிமையாளர்கள்.

முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, March 10, 2023

கீழக்கரையில் மார்ச் 11-12 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கல்வி குழுமங்கள் மற்றும் நடிகர் விஐய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் ஆகியவற்றின் சார்பில் கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

 

நாளை (11-ந்தேதி) மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற உள்ள இந்த முகாமில் தலைசிறந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களின் பணியாளர் தேவைக்காக சுமார் 15 ஆயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளன.

 


10-ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் மேலாண்மைதுறை, எம்.பி.ஏ, கணினி அறிவியல், மருத்துவம் சார்ந்த இதர படிப்புகள் படித்த அனைவரும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் எதிர்கால வாழ்விற்கான சிறந்த வேலைவாய்ப்பினை பெற்று பயன்அடையலாம்.

 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள http://jobfair.vvvsi.com என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு இலவசம் என்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம் என்று முகமது சதக் கல்வி குழுமங்களின் தலைவர் முகமது யூசுப் சாஹிப், இயக்குனர் ஹாமீது இப்ராகிம் ஆகியோர் தெரிவித்தனர்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, March 3, 2023

கீழக்கரை அரசு மருத்துவமனையை மேம்படுத்த அமைச்சரிடம் மனு!!

No comments :

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதி தாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தை திறந்து வைப்ப தற்கு வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனை, காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

 


அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

 

கீழக்கரை அரசு ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த நிலையில் கீழக்கரை சுற்று வட்டார பகுதி மக்கள் மருத்துவத்துக்கு இங்கு வந்து சென்றனர். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோதே பணியாளர்கள், உபகரணங்கள் பற்றாக்குறையாக இருந்தது. தற்போது தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் இதே நிலை நீடித்து வருகிறது. 


எனவே ஆஸ்பத்திரியை மேம்படுத்தி புதிய கட்டிடம் அமைத்து தரவும், தளவாடப்பொருட்கள் மற்றும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனு வில் குறிப்பிட்டுள்ளது. 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, February 23, 2023

ராமநாதபுரத்தில் பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெறுகிறது!!

No comments :

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் 14 முதல் 24 வயது வரையிலான இளம் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

 

இதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்களுக்கான தேர்வு வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.



இதற்கான தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தங்களது பெயர்களை வருகிற 26-ந்தேதி மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் உள்ள வலைப்பயிற்சி களத்தில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் உரிய படிவத்துடன் ஆதார் கார்டு நகலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

 

இதுகுறித்து மேலும் விவரங்களை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செயலாளர் மாரீஸ்வரனை 9443112678 என்ற எண்ணிலும்,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செயலாளர் சதீஷ்குமாரை 9443978488 என்ற எண்ணிலும்

தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, February 8, 2023

மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

காலியிடங்கள் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் 19 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 


அதன்படி பரமக்குடி வட்டார இயக்க மேலாளர்,

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்

திருப்புல்லாணி-2,

திருவாடானை-4,

ஆர்.எஸ்.மங்களம்-2,

மண்டபம்-1,

நயினார்கோவில்-1,

போகலூர்-1,

முதுகுளத்தூர்-3,

கமுதி-2,

கடலாடி-3

 

என மொத்தம் ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் 19 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் காலியிடங்கள் உள்ளன. வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரியாக இருக்க வேண்டும். கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை உண்டு.

 

28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மகளிர் நல மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் 2-3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

 

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வரும் 22.2.23-க்குள் கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம்

என்ற முகவரியில் விண்ணப்பதாரர்கள் புகைப்படம், சுயவிவரங்களுடன் உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தகுதியானவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். தேர்வு நடைபெறும், தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, February 1, 2023

விவசாயிகளுக்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு; எப்படி பெறுவது?!!

No comments :

தமிழக அரசின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுப்புற சூழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிர் சாகுபடியுடன் மரம் வளர்ப்பினை ஊக்கப்படுத்த ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

வேளாண் உழவர் நலத்துறை மூலம் முழு மானியத்தில் மரக்கன்றுகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடவு செய்ய ஒரு எக்டேருக்கு 160 மரக்கன்றுகளும், அடர் நடவு முறையில் நடவு செய்வதாக இருந்தால், ஒரு எக்டேருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகளும் வழங்கப்படும். அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 2 எக்டேர் பரப்புக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்படும்.

 


இத்திட்டத்தின் மூலம் 29 வகையான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

செம்மரம், புங்கம், வேங்கை, குடம்புளி, மகோகனி, கொடுக்காபுளி, மருதம், பூவரசு, நாவல், இலுப்பை, நெல்லி ஆகிய மரக்கன்றுகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இத்திட்டத்தினை பெற்று பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளின் நிலத்தை அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்கப்படும்.

 

விவசாயிகளுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இலவசமாக பெற்று நடவு செய்யலாம். மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.