(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 10, 2015

வரும் 14ஆம் தேதி டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு?

No comments :
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதன் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை யில் முதல் ரவுண்டில் மட்டும் ப..ஜ.க வின் கிரண்பெடி முன்னிலையில் இருந்தார். அடுத்த சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கையில் பின்தங்கினார். தொடர்ந்து அவர் தோல்வி முகத்தில் உள்ளார்.

டெல்லி தேர்தல், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் என்ற தனி மனிதருக்கு எதிரான போட்டி போல் மாறிவிட்டது. அவர் போட்டியில் வெற்றி பெற்று விட்டார். நாங்கள் இருவரும் போட்டியாளர்கள் நாங்கள் இருவரும் போட்டியில் பங்கேற்று விளையாடினோம். நாங்கள் மொத்தமாக சேர்ந்து மோதினோம். ஆனால் தனி ஒரு ஆள் வெற்றி பெற்று விட்டார்.



டெல்லி தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். எனது அணுகுமுறைகளும், கொள்கைகளும் தோற்றுப் போய்விட்டது. அது என்னு டையது தான். அதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்.என்று கிறன் பெடி கூறி உள்ளார்.
இதே போல, பா.ஜனதா வின் மற்ற முக்கிய வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தனர். தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனது டுவிட்டரில் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு கிரண்பெடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அரவைந்த கெஜ்ரிவாலுக்கு முழு மதிப்பெண் கிடைத்து உள்ளது.வாழ்த்துக்கள்.இப்போது அவர் டெல்லியை உயரமான இடத்திற்கு கொண்டு செல்லட்டும். உலகதரத்திலான நகரமாக மாற்றட்டும்.எனகூறி உள்ளார்.

இதனிடையே, வரும் 14ஆம் தேதி டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments :

Post a Comment