(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 4, 2015

கீழக்கரை அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்தவர் கைது

No comments :
கீழக்கரை தட்டாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன்(28). இவரது மனைவி பிரியா பிரசவத்துக்காக, கீழக்கரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். 


அறுவை சிகிச்சை மூலம் பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்
, செவ்வாய்க்கிழமை தனது மனைவியை டிஸ்சார்ஜ் செய்யுமாறு அலெக்ஸ்பாண்டியன் மருத்துவரிடம் வற்புறுத்தியுள்ளார். மருத்துவர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்த அலெக்ஸ்பாண்டியன், மருத்துவமனை கண்ணாடியை உடைத்துள்ளார்.
 
இதுகுறித்து தலைமை மருத்துவர் ராஜ்மோகன் கொடுத்த புகாரின் பேரில், கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அலெக்ஸ்பாண்டியனை கைது செய்தனர்.

செய்தி: தினகரன்

No comments :

Post a Comment