(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 21, 2015

ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு!!

No comments :

ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயில் வாரம் மூன்று முறை இயக்கப்படுகிறது. ராமநாதபுரம் வழியாக பயணப்படும் இந்த விரைவு ரயிலை பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ராமேசுவரம்-திருப்பதி விரைவு ரயிலில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 16780/16779: ராமேசுவரம்- திருப்பதி- ராமேசுவரம் வாரம் மூன்று முறை விரைவு ரயிலில் நிரந்தரமாக 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி மார்ச் 24-ஆம் தேதி முதல் இணைக்கப்படும்.

No comments :

Post a Comment