(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 23, 2015

மாவட்ட ”கிரிக்கெட்” போட்டி. கீழக்கரை MSEC அணி சாம்பியன்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி (MSEC) சாம்பியன் பட்டம் வென்றது. 



ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் 2014-15க்கான முதல் தர 50 ஓவர் கிரிக் கெட் லீக் போட்டிகளை நடத்தியது. இதில் கலந்து கொண்ட கீழக்கரை முகம்மதுசதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்ற 9 அணிகளை வென்று லீக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றனர்.

வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களை அறக்கட்டளை தலைவர் ஜனாப் அல்ஹாஜ், முகம்மது யூசுப், அறக்கட்டளை செயலாளர் ஹாஜியாயினி சர்மிளா, உறுப்பினர் ஹுசைன், முதல்வர் முனைவர் முகம்மது ஜஹாபர், உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், கல்லூரி துறைதலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

No comments :

Post a Comment