(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 17, 2015

ராமநாதபுர வங்கியில் தீ விபத்து!!

No comments :
ராமநாதபுரம் நகர் கேணிக்கரை பகுதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்தது.


கேணிக்கரை பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் பேங்க் ஆப் பரோடா கிளை உள்ளது.  இவ்வங்கியின் அலுவல் நேரத்தில் திடீரென வங்கியிலிருந்த 3 பேட்டரிகள், இன்வெர்ட்டர்கள் ஆகியன தீப்பிடித்து எரிந்தன. 

இதனால் வங்கி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக வங்கியை விட்டு வெளியேறினர். தகவலறிந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி, நிலைய அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்தில் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமûடைந்திருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment