(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 13, 2015

கீழக்கரையில் ஆட்டோவில் ஆடு திருடிய 3 நபர்கள் கைது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஆட்டோவில் ஆடு திருடிய 3 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கீழக்கரை அருகே பழஞ்சிறைப் பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் கருப்பையா (45). இவருக்குச் சொந்தமான ஆடுகள், பழஞ்சிறை அம்மன் கோயில் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியே ஆட்டோவில் வந்த 3 நபர்கள், கருப்பையாவின் 2 வெள்ளாடுகளை ஆட்டோவில் ஏற்றினர்.

அப்போது, ஆடுகள் கத்தியதைக் கண்ட கருப்பையா, ஆட்டோவில் வந்தவர்களை பார்த்து கூச்சலிட்டார். ஆனால், மர்ம நபர்கள் ஆடுகளுடன் தப்பிச் சென்றனர்.   இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் ஆட்டோவை விரட்டிச் சென்றனர். புல்லந்தை உள்ளிட்ட பல கிராமங்களுக்கு ஆட்டோவில் சென்ற மர்ம நபர்கள், கடைசியில் வழி தெரியாமல் பழஞ்சிறை பகுதிக்கே வந்தனர்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் ஆட்டோவுடன் மர்மநபர்களையும் பிடித்து, கீழக்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காவல் சார்பு-ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், ஆட்டோ மற்றும் ஆடுகளுடன் 3 பேரையும் கைது செய்தார்.


விசாரணையில், கீழக்கரை ஆடறுத்தான் தெரு கமாலுதீன் மகன் அக்ரம் மாலிக்(26), நாடார் கடை தெரு ஹைதர் அலி மகன் முஹம்மது அபுபக்கர் (44), புதுகிழக்குத் தெரு செய்யது இபுராகீம் மகன் சதாம் உசேன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.   பின்னர், கீழக்கரை போலீஸார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment