(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 6, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளின் நலன் காக்கும் சிறப்பு மருத்துவ திட்டம்!!

No comments :



ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய, மாநில அரசு களின் சிறப்பு திட்டமான பள்ளி குழந்தைகளின் நலம் காக்கும் மருத்துவ பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவ திட்டம்

தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளின் நலனை கருத் தில் கொண்டு அவர்களின் உடல் நலனை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வியாழக் கிழமையும் பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நோய்கள் கண் டறிந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் இத்திட்டத்தை மேலும் விரிவு படுத்தி பள்ளி மாணவ- மாணவிகள் அனைவருக்கும் நோயில்லா வாழ்வை உறுதிப் படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளன. 


இதன்படி பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ குழு மாவட்டந்தோ றும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தாலுகாவிற்கு 2 குழுக்கள் வீதம் மருத்துவ குழுவினர் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பரிசோ தனை செய்து உடனடி சிகிச்சை அளிப்பார்கள். உயர் சிகிச்சை தேவைப்படுபவர் கள் அரசு ஆஸ் பத்திரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார் கள். இதற்காக தமிழகம் முழு வதும் மருத்துவ குழுவிற்கான டாக்டர்கள் நியமிக்கப்பட் டுள்ளன. இவ்வாறு ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவிற்கும் தலா 2 குழுக் களுக்கு தேவை யான 22 டாக்டர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்களுடன் ஒவ் வொரு குழுவிலும் தலா ஒரு செவிலியர், மருந்தாளுனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

மருத்துவ குழுவினர் அந்தந்த பகு திகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று சுழற்சி அடிப்படை யில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார்கள். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட் டுள்ள இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 1 வயது முதல் 6 வயதிலான குழந்தை களுக்கும், இதேபோல 18 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து நோய்களை கண்ட றிந்து சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மருத் துவ பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. 

இம்முகாம்களில் உயர் சிகிச்சை தேவைப்பட்ட 110 குழந்தைகள் அரசு ஆஸ்பத்தி ரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள் ளனர். தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதால் மருத்துவ குழுவினர் பள்ளிக ளில் முகாம்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 80,000 பேருக்கு மருத்துவ பரி சோதனை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்த பரிசோ தனையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடு, பிறவி குறைபாடு உள்ளிட்ட அனைத்தும் பரி சோதித்து அதற்கு தேவையான மருந்துகள் வழங்கப்படும். தேவைப்பட்டால் சம்பந்தப் பட்ட குழந்தைகளின் பெற் றோர்களை வரவழைத்து தேவையான அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் பவானி உமாதேவி தெரிவித்தார். 

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment