(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 17, 2015

கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா!!

No comments :
கீழக்கரையில் மக்கள் சேவை  அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா அரூஸியா தைக்கா வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.


விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் உமர் தலைமை வகித்தார். யூசுப் சுலைஹா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல்காதர், முன்னாள் நகர்மன்ற தலைவர் பசீர்அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் தலைவர் கமருஸமான், ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹசன்இபுராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி ஸலாஹூதீன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வட்டாட்சியர் செய்யது, கீழக்கரை நகராட்சி ஆணையர் முருகேசன், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கவுன்சிலர் முகைதீன் இபுராகீம், மீனவர் சங்க பிரதிநிதி அக்பர் ஆகியோர் செய்திருந்தனர். தமுமுக நகர செயலர் முஹம்மது சிராஜூதீன் விழாவினை தொகுத்து வழங்கினார். 

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

No comments :

Post a Comment