(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 5, 2015

கீழக்கரை சுற்றுப்புற பகுதிகளில் நாளை ஜூலை 6ம் தேதி மின் தடை!!

No comments :
கீழக்கரையில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.



கீழக்கரை உபமின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 6) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அலவாய்கரைவாடி, மாயாகுளம், முஹம்மது சதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல் மற்றும் மோர்குளம் ஆகிய கிராமங்கள் அனைத்தும் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

நோன்பு காலமக இருப்பதால் இந்த பராமரிப்பு பணிகளை மற்றொரு நாள் திட்டமிட தன்னார்வக்குழுக்களும், கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை

No comments :

Post a Comment