(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 5, 2015

வேலைவாய்ப்பற்ற ராமநாதபுர இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை!!

No comments :
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகை

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.100-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.300-ம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். 



உதவி தொகை பெற விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும். தங்களது பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், மற்றவர்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும் தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி மூலம் கல்வி படிப்பவர்கள் உதவித்தொகை பெறலாம். 

சுய உறுதிமொழி:

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்திருந்தால் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.375-ம், பட்டதாரிகளுக்கு ரூ.400-ம் உதவித்தொகையாக வழங்கப்படும். பயனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித் தொகை பெறக்கூடாது. 

எனவே தகுதிஉள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்வி சான்றுகள், அடையாள அட்டை போன்றவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப்படும். ஏற்கனவே உதவி தொகை பெற்று வருபவர்கள் வங்கி கணக்கு புத்தகத்துடன் சுய உறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார். 


No comments :

Post a Comment