(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 5, 2015

பரமக்குடி அருகே பைக் விபத்து, வாலிபர் இறப்பு!!

No comments :
பரமக்குடி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

 சிவகங்கை மாவட்டம் அதிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜேந்திரன் (35). இவர் தனது நண்பரான மலைராஜூடன் பைக்கில் திருவாடி கிராமத்தில் நடந்த காது குத்து நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் பைக்கில் அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சரஸ்வதி நகர் பகுதியில் மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. 


இதில் பலத்த காயமடைந்த இருவரும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். மலைராஜ் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார்.

 இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ராஜேந்திரனின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment