(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, July 21, 2015

திருப்புல்லாணியில் இறால் பண்ணைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல், பலர் கைது!!

No comments :
திருப்புல்லாணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மாசுபட்டு குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருவதை கண்டித்தும், இறால் பண்ணைகளை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்புல்லாணியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் பத்மநாதன் தலைமை தாங்கினார். திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் முகம்மது அலி, இளைஞர் அணி தொகுதி இணை செயலாளர் கணேசமூர்த்தி, தொகுதி பொருளாளர் வெண்குளம் ராஜு, மகளிர்அணி இலக்கியா, மண்டபம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சாலை மறியல் செய்த 58 பேரை திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர். 

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment