(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 22, 2015

ராமேசுவரம் திருக்கோயில் உண்டியல் வருவாய் ரூ.1 கோடியை தாண்டியது!!

No comments :
ராமேசுவரம் திருக்கோயில் உண்டியல் வருவாய் ரூ.1 கோடியை தாண்டியது.     


ராமேசுவரம் திருக்கோயிலில் உண்டியல்கள் நிரம்பியதை அடுத்து, கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் புதன், வியாழக்கிழமைகளில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக வெளிநாட்டு பணம் உள்பட 1 கோடியே 9 லட்சத்து 78 ஆயிரத்து 349 ரூபாயும், 226 கிராம் தங்கமும், 11கிலோ 920 கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தன.

உண்டியல் எண்ணும் பணியில் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும்,ஆசிரியைகளும், இந்தியன் வங்கி பணியாளர்களும், திருக்கோயில் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

செய்தி: தினசரிகள்


No comments :

Post a Comment