(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 8, 2015

ராமேசுவரம் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஆக.15 தேரோட்டம்!!

No comments :
ராமேசுவரம் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஆக.15 தேரோட்டம்!!


ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இக்கோயிலில் தொடர்ந்து 17 நாள்கள் நடைபெறும்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேரோட்டமும், ஆகஸ்ட் 18 இல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, கோயில் உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், மேலாளர் லெட்சுமிமாலா, கண்காணிப்பாளர்கள் ககாரின்ராஜ், ராஜாங்கம், ஆலய பேஷ்கார்கள், ராதா, அண்ணாத்துரை, கண்ணன், கலைச்செல்வம், நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment