(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 15, 2015

ஆக.15 முதல் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. வருவாய்த்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர், கல்வித்துறை, பேரூராட்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் பேசுகையில், ‘‘ஒரே ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாக்கோல் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீராதாரம் குறையும். பிளாஸ்டிக்கை எரிப்பதால் வெளிவரும் நச்சு வாயு நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும். பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நடத்த வேண்டும். வணிக நிறுவனங்கள், கடைகளில் பிளாஸ்டிக் பையை தவிர்த்து காகிதம், துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும். நாளை ஆக.15 முதல் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மீறி பிடிபட்டால் இரண்டு முறை அபராதம் அதன் பிறகும் பயன்படுத்தினால் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் பிளாஸ்டிக் இல்லாத நிலையை ஏற்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ராமநாதபுரம் எஸ்.பி மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments :

Post a Comment