(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 9, 2015

நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் 2-ம் இடத்தை பிடித்தது திருச்சிராப்பள்ளி!!

No comments :
நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் மைசூர் முதலிடத்தையும் திருச்சி 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன. தலைநகரங்களில் பெங்களூருதான் மிகவும் தூய்மையான நகரம் என்று தெரியவந்துள்ளது.

நாட்டில் 31 மாநிலங்களை சேர்ந்த 476 நகரங்களில் (ஒரு லட்சத் துக்கும் மேல் மக்கள்தொகை உள்ள நகரங்கள்) திடக்கழிவு மேலாண்மை எப்படி செயல் படுத்தப்படுகிறது, திறந்தவெளி கழிப்பிடம் எந்தளவுக்கு உள்ளது, கழிவுநீர் அகற்றும் முறை, கழிவுநீர் மறுசுழற்சி முறை, குடிநீரின் தரம், ஏரி, குளங்களில் உள்ள நீரின் தரம், தண்ணீரால் பரவும் நோய்களால் இறந்தோர் எண்ணிக்கை போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்த புள்ளிவிவரம் ஒவ்வொரு நகரிலும் சேகரிக்கப்பட்டது.


இந்த 476 நகரங்களில் கர்நாடகத்தை சேர்ந்த மைசூர் முதலிடத்திலும், தமிழகத்தின் திருச்சி 2-வது இடத்திலும் உள்ள தாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திறந்தவெளி கழிப்பிடங்கள் மைசூரில் மிகமிக குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு கழிவறை வசதி சிறப்பாக உள்ளது.

தூய்மையான மாநில தலை நகரங்கள் என்று பார்த்தால் கர்நாடக தலைநகர் பெங்களூரு தான் சிறப்பான இடத்தில் உள்ளது. தவிர கர்நாடகத்தின் 3 நகரங்களும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

தூய்மையான 100 நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நகரங்கள்:

மைசூர் (கர்நாடகா),
திருச்சி (தமிழ்நாடு),
நவி மும்பை (மகாராஷ்டிரா),
கொச்சி (கேரளா),
ஹாசன் மண்டியா,
பெங்களூரு (கர்நாடகா), தி
ருவனந்தபுரம் (கேரளா),
அலிசாகர் (மே.வங்கம்),
காங்டாக் (சிக்கிம்),
தமோ (மத்தியப் பிரதேசம்).



No comments :

Post a Comment