(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 20, 2015

மல்லல் ஊராட்சி களக்குடி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்காக ரூபாய்.3.00 மூன்று லட்சம் நிதி ஒதுக்கீடு

1 comment :
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லல் ஊராட்சி களக்குடி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்காக ரூபாய்.3.00 மூன்று லட்சம் நிதி ஒதுக்கீடு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , மல்லல் ஊராட்சி களக்குடி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை புதிய கட்டடம் கட்டுதல் பணிகளுக்காக
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2015 - 2016 ம் ஆண்டின் கீழ்
மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 3.00 ( மூன்று லட்சம் ) நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார் IAS அவர்களின் செயலாணைகளின்படி
அரசாணை எண் : ந.க.ஆர்.4/3453/2015.
நாள் : - 07.07.2015

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

1 comment :

Unknown said...

மல்லல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட களக்குடி கிராமத்திற்கு இது வரையிலும் நிழற்குடை அமைத்து தரவில்லை.என வருத்தத்துடன் தெறிவித்துக் கொள்கிறேன்

Post a Comment