(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 22, 2015

ராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது!!

No comments :
ராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

ராமநாதபுரம் கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை தலைமையில் கேணிக்கரை எஸ்ஐ கணேசலிங்க பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் வாலாந்தரவை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 


அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த அருண் (25), சதீஸ்குமார் (34), உருளை என்ற துரைப்பாண்டி (30), ராமநாதபுரம் தமீம் அன்சாரி (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  தப்பியோடிய கார்த்தி, வினோத், வீரபாண்டி என்ற கமால், கொக்கு என்ற மகேந்திரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தி: தினமணி

No comments :

Post a Comment