(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 15, 2015

பூரண மதுவிலக்கு கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரத போராட்டம்!!

No comments :
பூரண மதுவிலக்கு கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட தலைவர் குட்லக் ராஜேந்திரன் ஏற்பாட்டின்பேரில் 11 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகரில் அரண்மனை பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு நகர் தலைவர் கோபி தலைமை தாங்கினார். இதில் செல்லத்துரை அப்துல்லா, முத்துராமலிங்கம், மாவட்ட தலைவர்கள் காமராஜ், நிஜாம்அலிகான், மேகநாதன், நசுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மீனவர் அணி செயலாளர் பாம்பன் ஆர்ம்ஸ்ட்ராங், மாவட்ட பொது செயலாளர்கள் பால்சாமி, கருப்பையா, மீன்கடை முருகேசன், கருணாகரன், வீரசேகரன், வீரபாண்டி, ஆறுமுகம், பாஸ்கரசேதுபதி, வக்கீல் அன்புசெழியன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், வட்டார தலைவர் காருகுடி சேகர், பாராளுமன்ற பொதுச்செயலாளர் நேரு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் குட்லக் ராஜேந்திரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.



பரமக்குடி
பரமக்குடி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐந்துமுனை பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு நகர் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பாம்பூர் வேலுச்சாமி, ராம்சுபாக் சிங், முனீசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் பொது செயலாளர் கோபிநாத் வரவேற்று பேசினார். இதில் டாக்டர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர்கள் கிருஷ்ணராஜ், கணேசன், கோட்டைமுத்து, மாவட்ட துணை தலைவர்கள் ஆலம், மகாதேவன், கோவிந்தராமன், மாரிமுத்து, பார்த்திபனூர் நகர் தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நயினார்கோவில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு வட்டார தலைவர் ஜோதிபாலன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செந்தாமரைக்கண்ணன், ஆதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பேச்சாளர் வீரபத்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் போஸ், கோட்டைமுத்து, நிர்வாகிகள் நாராயணன், ஹரிகரன், ராஜேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு நகர் தலைவர் சுரேஷ்காந்தி தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் போஸ், நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் திருமூர்த்தி வரவேற்று பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் மலேசியா பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் சரவணாகாந்தி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் வேலுச்சாமி, கீழக்கொடுமலூர் கணேசன், தலைமை கழக பேச்சாளர் கருணாகரன், ஆலம் ஆகியோர் பேசினர்.

சாயல்குடி
இதேபோல சாயல்குடியில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மாவீரன் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர் சுசிலா மனுவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மக்கண் அமிர்தம் கல்லூரி தாளாளர் ரமணி பாண்டியன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் வட்டார தலைவர் பிரமநாதன், மாவட்ட செயலாளர் போஸ், நரிப்பையூர் சுலைமாடன், மாவட்ட செயலாளர் சண்முகவேல், லட்சுமணன், அழகுவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலாடி
கடலாடி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு வட்டார தலைவர்கள் கருங்குளம் தனசேகரன், ஆப்பனூர் சுப்பிரமணிய சேர்வைக்காரர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை தலைவர் முத்துத்தேவர் முன்னிலை வகித்தார். இதில் ஆப்பனூர் ராமகிருஷ்ணன், சிக்கல் அமீன், ஏர்வாடி கரீம், சிறைக்குளம் செல்வராஜ், பழனி, சக்திவேல், தனிக்கொடி, புண்ணியவேல், பாண்டி, கூரிக்கிழவன், பச்சமால், நீலமேகம், முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாடானை
திருவாடானையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் குமார், தட்சிணாமூர்த்தி, நகர் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் கண்ணன் வரவேற்று பேசினார். உண்ணாவிரதத்தை மாவட்ட காங்கிரஸ் தலைவர் குட்லக் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் முருகானந்தம், கோடனூர் கணேசன், தொண்டி தியாகராஜன், மாவட்ட பொது செயலாளர்கள் நம்புதாளை பிச்சைக்கண்ணு, எட்டுகுடி மரியஅருள், சேந்தனி சத்தியேந்திரன், ஜெயபாண்டி, விவசாய பிரிவு தலைவர் உதயக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் அஜீஸ், அஞ்சுகோட்டை ராமநாதன், துரை கதிர் கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் வாணியேந்தல் மகாலிங்கம், தொண்டி நகர் தலைவர் காத்தராஜா, நகர் செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் செயலாளர் தட்சிணாமூத்தி நன்றி கூறினார்.

கீழக்கரை
கீழக்கரையில் இந்து பஜா£ரில் நகர் தலைவர் ஹமீதுகான் தலைமையிலும், கமுதியில் தலைவர் கோவிந்தன் தலைமையிலும், அபிராமத்தில் நகர் தலைவர் அருணாசலம் தலைமையிலும், திருப்பாலைக்குடியில் தாலுகா தலைவர் முருகன் தலைமையிலும் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி: தினத்தந்தி


No comments :

Post a Comment