(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 15, 2015

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆதார் எண்ணை வெப் பே ரோல்லில் இணைக்க வேண்டும் -கலெக்டர் நந்தகுமார்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆதார் எண்ணை வெப் பே ரோல்லில் இணைக்க வேண்டும் என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர்  விடுத்துள்ள அறிக்கை, ‘‘ மாவட்டத்தில உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் தாங்கள் ஊதியம் பெறும் அலுவலகங்களில் ஆதார் எண்ணை வெப் பே ரோல்லில் அப்டேட் செய்ய வேண்டும். ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலங்களில் கொடுத்து இபென்ஷன் சாப்ட்வேரில் அப்டேட் செய்ய வேண்டும். 


ஓய்வூதியருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டை இதுவரையில் பெறாதவர்கள்  சம்பந்தப்பட்ட கருவூலத்தில் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தீன் கீழ் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்கள் உரிய படிவத்தினை வழங்கி புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இதுவரை 2015ம் ஆண்டிற்கான நேர்காணலுக்கு வராதவர்கள் ஆக.20ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கருவூலத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகாத பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment