(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 27, 2015

ராமநாதபுரத்தில் காவல் சார்பு-ஆய்வாளர் பணியிட நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

No comments :
காவல் சார்பு-ஆய்வாளர் பணியிட நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற இருக்கிறது.

 இது குறித்து, ஃபோகஸ் அகாதெமியின் ஒருங்கிணைப்பாளர் 
மு. சிபிகுமரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 94 பின்னடைவுக் காலியிடங்கள் உள்பட சுமார் 1,078 பொது மற்றும் துறை சார்ந்த சார்பு-ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு முடிந்து, வரும் 3.9.2015 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

 இதற்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஃபோக்கஸ் அகாதெமி பயிற்சி வகுப்பினை இலவசமாக நடத்துகிறது.

நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் தங்களது சுய விவரங்களுடன், ராமநாதபுரம் ரயில்வே பீடர் சாலையில் வலம்புரி வணிக வளாகத்தில் உள்ள ஸ்பெக்டிரம் ஹெல்த் கிளப் அலுவலகத்தில் நேரில் வந்து முன்பதிவு செய்யவேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 99626-12726 அல்லது 95970-12144 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments :

Post a Comment