(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 27, 2015

உச்சிப்புளியில் ரெயில்வே மேம்பாலம் சர்வே பணிகள் நேற்று தொடங்கின!!

No comments :
உச்சிப்புளியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான சர்வே பணிகள் நேற்று தொடங்கின. 

ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னை,மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே செல்லும்போது உச்சிப்புளி பகுதியில் உள்ள ரெயில்வேகேட் அடைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு ரெயில்வேகேட் அடைக்கப்படுவதால் வாகனங்களில் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. 


அவ்வப்போது கேட் பழுதாகிவிடுவதால் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதையடுத்து உச்சிப்புளி ரெயில்வேகேட்டை கடந்து செல்ல ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, உச்சிப்புளி ரெயில்வே கேட் பகுதியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான சர்வே பணிகள் நேற்று தொடங்கியது. இதற்காக தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு என்ஜினீயர்கள் விஜய்ஆனந்த், வினேஷ், சாஜின் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினர் நவீன கருவிகளை கொண்டு பாலம் அமைப்பதற்கான இடத்தை சர்வே செய்து வருகின்றனர். 


இந்த பணிகள் முடிந்த பிறகு, ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். பின்னர் ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் உச்சிப்புளி ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பாலம் கட்டப்பட்டால், பொதுமக்கள் வாகனங்களில் எந்த சிரமமும் இல்லாமல் ராமேசுவரத்திற்கு சென்றுவர முடியும். 

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment