(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 3, 2015

ராமநாதபுரத்தில் செப். 8ஆம் தேதி மாவட்ட கேரம் விளையாட்டுப் போட்டிகள்!!

No comments :
ராமநாதபுரத்தில் செப். 8ஆம் தேதி மாவட்ட கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதாக புதன்கிழமை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் செப்.8ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. 

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஆண், பெண் இருபாலருக்கும் இரு பிரிவுகளாக ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடைபெறும். இவற்றில் இளநிலைப் பிரிவு (மழலை வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை) ஜூனியர்ஸ் (தொடக்கப் பள்ளி முதல் 5 ஆம் வகுப்பு வரை) முதுநிலைப் பிரிவு (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) என போட்டிகள் நடத்தப்படும்.



போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து சான்றிதழ் கொண்டு வந்து கொடுத்து போட்டியில் பங்கேற்க வேண்டும். இதில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் 3 இடம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment