(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 21, 2015

கீழக்கரை அருகே பக்கீர் அப்பா தர்கா கடற்கரையில் கரை ஒதுங்கிய மிதவையால் பரபரப்பு!!

No comments :
கீழக்கரை அருகே பக்கீர் அப்பா தர்கா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கிய மிதவையால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி பக்கீர்அப்பா தர்கா அடுத்துள்ள முத்தரையர் நகர் மீனவர்கள் நிறைந்த கிராமம் ஆகும். இப்பகுதி மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலுக்குச் சென்ற போது ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. பெரிய கப்பல்களை நிறுத்தும் போது அடையாளங்களுக்காக மிதக்க விடப்படும் காற்றடைக்கப்பட்ட மிதவை இது என்பது தெரியவந்தது.


இதுகுறித்த தகவலின்பேரில் வனச்சரக அலுவலர்கள் மிதவையை பார்வையிட்டனர். இந்த மிதவை 15அடி நீளம் 7அடி அகலம் மற்றும் 200 கிலோ எடை உள்ளது. பின்னர் இதனை கைப்பற்றிய வனச்சரக அதிகாரிகள் எங்கிருந்து கரை ஒதுங்கியது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment