(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 24, 2015

ராமநாதபுரத்தில் கலாம் புத்தக திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. நவம்பர்-1ம் தேதி வரை நடக்கிறது!!

No comments :

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் பெயரை நினைவு கூறும் வகையில் கலாம் புத்தகத் திருவிழா என்ற பெயரில் இந்த புத்தக திருவிழா நடைபெற்றது. கலை இலக்கிய ஆர்வலர் கழகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கமும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இப்புத்தகத் திருவிழாவை நடத்துகின்றனர். 

புத்தக திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் வந்துள்ளனர். ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில், ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா,பதிப்பாளர் சங்க தலைவர் மெ.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார். கலை இலக்கிய ஆர்வலர் சங்கத் தலைவர் டாக்டர்.அ.சின்னத்துரை அப்துல்லா வரவேற்றார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ் விழாவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். 

பின்னர் மாலை 6 மணியளவில் கவிஞர். நந்தலாலா, தேசம் போகும் பாதை என்ற தலைப்பிலும், முனைவர் செ.சுந்தரவள்ளி, வேர்களைத் தேடி என்ற தலைப்பிலும் பேசினர். ராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மயில்வாகனன் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார்.



 இந்த விழா தொடர்பாக கலை இலக்கிய ஆர்வலர் சங்கச் செயலர் டாக்டர். வான்தமிழ் இளம்பரிதி கூறியது: இந்த ஆண்டு புத்தகங்கள் அதிகமாக விற்பதற்காக புத்தக வாசிப்பு இயக்கத்தை நடத்தியுள்ளோம்.   சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்குப் புத்தகம் வாங்குவதற்காக பணத்தை சேமித்து வைக்க கடந்த 3 மாதத்துக்கு முன்பாகவே உண்டியல்கள் வழங்கியுள்ளோம். புத்தக அரங்கின் இடது புறத்தில் சிறுதானியத்தின் மகத்துவத்தை உணர்த்தும் உணவுத் திருவிழாவும், மூலிகை கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. வலது புறத்தில் அறிவியல் கோளரங்கமும், அறிவியல் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment