(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 12, 2015

ராமநாதபுரம் வேலைவாய்ப்பு முகாமில் 1204 பேருக்கு பணி நியமன ஆணை!!

No comments :
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் சுந்தர்ராஜன் பேசியது: 

கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 4310 பேர் பங்கேற்றனர். அவர்களில் 1204 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு நடைபெறும் முதல் முகாமில் 39 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 824 பேர் பங்கேற்றுள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் மணக்குடியில் 244 ஏக்கரில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா 150 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்காவில் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். நிறைவாக பேசிய மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், 824 பேர் பங்கேற்றதில் 230 பேர் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.


முகாமுக்கு எம்.பி. அ.அன்வர்ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.சுந்தரபாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஜெயஜோதி,நிலவள வங்கியின் தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராம்கோ தலைவர் செ.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment