(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 31, 2015

ராமநாதபுரத்தில் எலக்ட்ரானிக் கடையில் ரூ.16.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!!

No comments :

ராமநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான எலக்ட்ரானிக் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு அதிலிருந்த ரூ.16.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.


ராமநாதபுரம் சாலைத் தெருவில் தனியார் நிறுவனத்தின் சார்பில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடை உள்ளது. இக்கடையின் பின்பக்க கதவில் துளையிட்டு அதிலிருந்த 141 செல்போன்கள், 8 மடிக்கணினிகள், 21 காமிராக்கள், 14 சார்ஜர்கள் உட்பட மொத்தம் ரூ.16.75 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

வழக்கம் போல வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்த போது பொருட்கள் திருடு போயிருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக கடையின் மேலாளர் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment