(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 24, 2015

ராமநாதபுரத்தில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு!!

No comments :
ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக 2 வாலிபர்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர்.  

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் சரத்குமார்(24). இவரது நண்பர் சத்யாநகர் ராஜ்கபூர்(30). இவர்கள் இவரும் நேற்று மாலை சின்னக்கடை தெருவில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. 

இதில் காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த ராஜ்கபூர், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக தெரியவந்தது. இதையடுத்து  தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment