(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 18, 2015

பெரியபட்டின இளைஞருக்கு அறிவால் வெட்டு, மூவர் கைது!!

No comments :

பெரியபட்டினம் பகுதியில் இளைஞரை அறிவாளால் வெட்டிய மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 பெரியபட்டினம் அகமதுஅலி நகரைச் சேர்ந்தவர் அகமது ரைசுதீன் (40). இவர் வியாழக்கிழமை இரவு தங்கையா நகர் பகுதி வழியாக நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ரைசுதீனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இது குறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பெரியபட்டினம் ஜலாலியாநகர் பகுதியைச் சேர்ந்த செய்யதுசாதிக், ரியாஸ்கான், தேவிபட்டினம்  பகுருதீன் ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment