(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 27, 2015

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் புகார்!!

No comments :

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் அதன் நிர்வாகிகள் திங்கள்கிழமை புகார் செய்துள்ளனர்.

அந்த அமைப்பின் மாவட்டச் செயலர் இ.அப்துல்நாசர் தலைமையில் 100 பெண்கள் உள்பட சுமார் 400க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: 

அக்.15 ஆம் தேதி பெரியபட்டினத்தில் முகம்மது ரைசுதீன் என்பவரை மர்ம நபர்கள் தாக்கியதாக கூறி, அக்கிராம பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் உள்ளிட்ட 11 நிர்வாகிகள் திருப்புல்லாணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 10 பேர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. 


இவ்விஷயத்தில் காவல்துறை தீர விசாரிக்காமல் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. எனவே நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment