(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 26, 2015

தொண்டி அருகே கொக்கு வேட்டையாடிய இருவர் கைது!!

No comments :
தொண்டி அருகே உள்ள சோளியக்குடி கிராமத்தில் வன பகுதிகளில் பறவைகளை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில் மாவட்ட வன உயிரினகாப்பாளர் உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் பாஸ்கரன் ,வேட்டை தடுப்பு காவலர்கள் செல்வராஜ் , விஜயபாஸ்கர், அய்யர்பிச்சை ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது அங்கு பறவைகளை வேட்டையாடியது தொடர்பாக சோளியக்குடியை சேர்ந்த நாகராஜ் (வயது30), செய்யது (28) ஆகிய 2 பேரையும் பிடித்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 25கொக்குகளை பறிமுதல் செய்தனர். 

மேலும் இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து அபராதம் வசூலித்தனர். பின்னர் கொக்குகள் சம்பை மாங்க்ரோவ் காடுக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டன. 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment