(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 29, 2015

தேவர் குருபூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கனரக வாகன போக்குவரத்தில் மாற்றம்!!

No comments :
தேவர் குருபூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கனரக வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி நிகழ்ச்சியை முன்னிட்டு ராமேசுவரம், கீழக்கரை, ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து மதுரை சென்று வரும் தினசரிப் பேருந்துகள் மற்றும் கனரக வாகன போக்குவரத்தில் பொதுமக்கள் நலன் கருதி ஒரு நாள் மட்டும் மாற்றம் செய்யயப்பட்டுள்ளது. 


நிகழ்ச்சி நடைபெறும் அக்.30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம்,பாண்டியூர், நயினார்கோயில், அண்டக்குடி, இளையான்குடி,சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை சென்று வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment