(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 9, 2015

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 3,920 பேர் பங்கேற்றனர்!!

No comments :
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 தேர்வில், 3,920 பேர் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி ஆகிய இரண்டு இடங்களிலும் குரூப்-1 தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க, சிவகங்கை மாவட்டத்திலிருந்து 3,051 பேர் விண்ணப்பித்திருந்தனர். 

மொத்தம் 9 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை, 1,791 பேர் மட்டுமே எழுதினர். இத்தேர்வு எழுதும் மையங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்கப்பட்டிருந்தது. இத்தேர்வை, 11 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 153 கண்காணிப்பாளர்கள், 2 நடமாடும் சேவை, 2 பறக்கும் படையினர் கண்காணித்தனர்.



ராமநாதபுரம்: குரூப்-1 தேர்வு எழுத, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 3,542 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாவட்டத்தில் மொத்தம் 13 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில், 2,129 பேர் பங்கேற்றனர். தேர்வு நடைபெற்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment