(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 19, 2015

ராமநாதபுரத்தில் டிச.2 ஆம் தேதி ஊர்காவல்படை தேர்வு!!

No comments :
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வரும் டிச.2 ஆம் தேதி ஊர்காவல்படைக்கு ஆள்கள் தேர்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஊர்க்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆள்கள் தேர்வு நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட நல்ல உடற்தகுதி உடைய இருபாலாரும் கலந்து கொள்ளலாம்.



10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தேர்வில் கலந்து கொள்ள வரும் போது மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் மற்றும் இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் ஆஜராகுமாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment