(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 26, 2015

ராமநாதபுர அறிவியல் நிலையத்தில் நவ-27ம் தேதி அன்று பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய பயிற்சி!!

No comments :
ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  வெள்ளிக்கிழமை(நவ.27) பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய இலவசப் பயிற்சி நடைபெற இருக்கிறது.

இது குறித்து, அறிவியல் நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெள்ளிக்கிழமை(நவ.27) பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய பயிற்சியும், 30 ஆம் தேதி சிறுதானியங்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் பற்றிய பயிற்சியும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. 

விருப்பமுள்ள உழவர்கள், பெண்கள், சுயதொழில்முனைவோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள வயது வரம்பு எதுவும் இல்லை.


பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்

திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண்மை அறிவியல் நிலையம்
கடலோர உழவர் ஆராய்ச்சி மையம்
ராமநாதபுரம்-623503 

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு, 04567-230250 மற்றும் 04567-232639 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment