(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 26, 2015

பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரிடம் விசாரணை!!

No comments :
பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து 5 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காளையார்கோவில் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான சி.ரமேஷ் (30) என்பவர் பரமக்குடியில் கோழி மொத்த வியாபாரக் கடை வைத்து நடத்தி வந்தார்.

இவர், திங்கள்கிழமை புழுதிக்குளத்தில் உள்ள தனது மனைவி மற்றும் 4 மாத குழந்தையை பார்ப்பதற்காக அவரது காரில் பரமக்குடியிலிருந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர்கள் தென்பொதுவக்குடி காலனி பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கூலிப் படையைச் சேர்ந்த கும்பலை வைத்து சிலர் ரமேஷை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கூலிப் படையினர் யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு இக்கொலையைச் செய்தனர் என்பது குறித்து 5 பேரிடம் விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment