(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 28, 2015

பாஜக நிர்வாகி கொலை வழக்கு, 9 பேரை கைது செய்து, மேலும் ஒருவரை தேடுகிறது காவல் துறை!!

No comments :
பரமக்குடி அருகே நடந்த பாஜக நிர்வாகி கொலையில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கடந்த 23ம் தேதி இரவு பாஜக நிர்வாகி ரமேஷ்(29) வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பரமக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணனை முதலில் கைது செய்தனர். 

தொடர்ந்து அவரது கார் டிரைவர் தேவராஜ், இவரது தந்தை வேலுச்சாமி, சுரேஷ், மகேந்திரன், ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த தவமணி ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த பொன்னையாபுரம் முனியாண்டி மகன் கருணாகரனை(21) பரமக்குடி போலீசார் நேற்று கைது செய்தனர்.   மற்றொருவரான அழகர் மகன் திருமுருகன்(21) நேற்று ராமநாதபுரம் ஜேஎம். 2: நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். பாலா என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment