(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 1, 2015

ராமேசுவரம் கடலில் வெளிநாட்டு வீரர்கள் சாகச நீர் விளையாட்டு நிகழ்ச்சி!!

No comments :
ராமேசுவரம் கடலில் வெளிநாட்டு வீரர்கள் சாகச நீர் விளையாட்டு
ராமேசுவரம் கடலில் சனிக்கிழமை நடைபெற்ற நீர் விளையாட்டு போட்டிகளில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 100-கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக கடலோரப்பகுதியில் வசித்து வரும் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராமேசுவரம் சங்குமால் கடல்பகுதியில் விளையாட்டுதுறை சார்பில் இப்போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.


இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ் முன்னிலை வகித்து விளையாட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

தொடர்ந்து அங்கு நடைபெற்ற கயாக் படகு போட்டி, விண்ட்சர்பிங் போட்டி,பீச்பால் ஆகிய விளையாட்டு போட்டிகளில் பிரான்ஸ், இலங்கை, அமெரிக்கா, பிரேசில் ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் என 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

விளையாட்டுப்போட்டி துவக்க நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட வனஉயிரினகாப்பாளர் தீபக்பெல்கி, ராமேசுவரம் நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா, சுற்றுலாத்துறை அலுவலர் பாலசுப்பிரமணியன், ராமேசுவரம் நகர்மன்றத் தலைவர் அர்சுனன், முன்னாள் உறுப்பினர் பி.ஜி.சேகர், அதிமுக மாவட்ட செயலர் தர்மர், ராமேசுவரம் நகரச் செயலாளர் பெருமாள், அம்மா பேரவை நகரச் செயலாளர் கஜேந்திரன், ராமேசுவரம் வீட்டுவசதிவாரியத் தலைவர் கே.கே.அர்சுனன், மற்றும் மீனவர்களும்,ஏராளமான பெதுமக்களும் கலந்துகொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment