(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 18, 2015

கீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின் சாதனங்கள் பழுது, பொதுமக்கள் புகார்!!

No comments :
கீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின் சாதனங்களில் பழுது ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பல லட்ச ரூபாய் செலவில் புதிய  மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. மேலும் பழைய மின்கம்பங்கள் உயர் அழுத்த மின்கம்பிகள் போன்றவை புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.



(எரிந்த நிலையில் “வாஷிங் மெஷின்”)



இருப்பினும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலமணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களாக தினமும் குறைந்தது 10 முறை மின்தடை ஏற்படுகிறது. பிறகு ஒரு சில நிமிடங்களிலேயே மீண்டும் மின் இணைப்பு கிடைக்கிறது. அடிக்கடி ஏற்படும் இந்த மின்தடை காரணமாக குளிர்சாதன பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் பழுதடைந்துவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே கீழக்கரையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீர் செய்யுமாறு மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment