(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 28, 2015

கீழக்கரை பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை!!

No comments :
கீழக்கரை பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரையில் 17 ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பகுதியைச் சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

இப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளதால் அங்கு வருபவர்கள் இப்பகுதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் மாலை நேரங்களில் இந்த பகுதியில் பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment