(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 24, 2015

ராமேசுவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது!!

No comments :
ராமேசுவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

ராமேசுவரம், முத்துராமலிங்கத்தேவர் பகுதியில் வசித்து வருபவர் வெள்ளைச்சாமி மனைவி வள்ளி (46). இவர் வீட்டில் கஞ்சாவை மறைத்துவைத்து விற்பனை செய்து வருவதாக ராமேசுவரம் கோவில் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.


அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்கு போலீஸார் சென்று அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் ஒன்றரை கிலோ கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்து வள்ளியை கைது செய்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment