(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 26, 2015

ராமநாதபுரத்தில் திமுக நகர் கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்!!

No comments :
ராமநாதபுரம் அரண்மனை முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக நகர் கிளை சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் இருப்பது, நகரின் முக்கிய சாலைகளை பராமரிக்காமல் இருப்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுப.தங்கவேலன் தலைமை வகித்தார்.

கட்சியின் மாவட்டச் செயலர் சுப.த.திவாகர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா.ரகு, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிருபானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, இலக்கிய அணிச் செயலர் அரவரசன், தொமுச பேரவை மாவட்டச் செயலர் மலைக்கண்ணு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள்  கலந்துகொண்டனர். நகர் செயலர் ஆர்.கே.கார்மேகம் வரவேற்றார்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment