(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, December 25, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 போலீசார் அதிரடியாக பணியிட மாற்றம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 15 போலீசாரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டு உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் முதல் போலீசார் வரை 15 பேரை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கும், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமார், தங்கவேலு ஆகியோர் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவிற்கும், அங்கு பணியாற்றிய தலைமை காவலர் கிதியோன் நிலமோசடி தடுப்பு பிரிவிற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பஜார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் அர்ச்சுனன் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், வாலிநோக்கம் போலீஸ் நிலைய தலைமை காவலர் குமார் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்திற்கும், தங்கச்சிமடம் தலைமை காவலர் முனியசாமி ராமேசுவரம் போக்குவரத்து காவல் பிரிவிற்கும், கேணிக்கரை தலைமை காவலர் மகேந்திரன் நிலமோசடி தடுப்பு பிரிவிற்கும், எஸ்.பி.பட்டினம் முதல் நிலை காவலர் முருகநாதன் கோவிலாங்குளம் போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுவிலக்குபிரிவு

இதேபோல, ராமநாதபுரம் மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது காசிம் கீழக்கரை போலீஸ் நிலையத்திற்கும், மதுவிலக்கு தலைமை காவலர் சந்திரசேகர் சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கும், ராமநாதபுரம் நகர் காவல் நிலைய தலைமை காவலர் சாலமோன் அப்பாத்துரை சத்திரக்குடி போலீஸ் நிலையத்திற்கும், மதுவிலக்கு முதல்நிலை காவலர் ராமச்சந்திரன் சாயல்குடிக்கும், மண்டபம் முதல்நிலை காவலர் பழனிராஜா சத்திரக்குடிக்கும், பாம்பன் தலைமை காவலர் முத்துமுனியசாமி சத்திரக்குடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

செய்தி; தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment